அங்கன்வாடி மையங்களில் நேரில் ஆய்வு - குழந்தைகளுடன் கலந்துரையாடினார் மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார்

கோவையில் அங்கன்வாடி மையங்களில் மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் ஆய்வு நடத்தினர். அப்போது, அங்கிருந்த பணியாளர்களிடம் பொருட்களின் தரம் குறிந்து கேட்டறிந்த அவர், குழந்தைகளுடன் கலந்துரையாடி மகிழ்ச்சியடைந்தார்.


கோவை: புளியகுளம் பகுதியில் உள்ள நியாயவிலைக்கடை, அங்கன்வாடி மையம், பிரத்யேக மருத்துவ முகாம் ஆகியவற்றை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

கோவையில் மாநகராட்சியில் உள்ள நியாயவிலை கடைகள், அங்கன்வாடி மையங்களில் அவ்வப்போது மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையாளர் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்து வருகின்றனர்.



அதன்படி இன்று கோவை மாநகராட்சி புளியகுளம் பகுதியில் உள்ள அமுதம் அங்கன்வாடி நிலையம் மற்றும் நியாய விலைக்கடையில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார். அப்போது, பொருட்களின் தரம் குறித்து அங்கிருந்த பணியாளர்களிடம் அவர் கேட்டறிந்தார்.



அதனை தொடர்ந்து அப்பகுதியில் உள்ள மாநகராட்சி துவக்கப்பள்ளியில் நடைபெற்று வரும் பள்ளி மாணவர்களுக்கான பிரத்யேக சிறப்பு மருத்துவ முகாமினை நேரில் பார்வையிட்டார். பின்னர் பெரியார் நகர் அங்கன்வாடி மையத்தை நேரில் சென்று பார்வையிட்ட அவர், அங்கு குழந்தைகளுக்கு வழங்கப்படும் சிற்றுண்டிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு, குழந்தைகளுடன் கலந்துரையாடினார்.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...