மினி ஸ்டேடியம் தேர்வு பணி தீவிரம் - மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி பேட்டி

கோவையில் விளையாட்டு மைதானங்கள் இல்லாத அரசு பள்ளிகள் கணக்கெடுக்கபட்டு வருவதாகவும், தொகுதி வாரியாக மினி ஸ்டேடியம் அமைப்பதற்காக இடம் தேர்வு செய்யும் பணி நடைபெற்று வருவதாகவும், இடங்கள் தேர்வு செய்யப்பட்டவுடன் மைதானங்கள் அமைக்க இருப்பதாக மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி தெரிவித்தார்.



கோவை: கால்பந்தை உதைத்து தனியார் பங்களிப்புடன் அமைக்கப்பட்ட விளையாட்டு மைதானத்தை மாணவர்கள் பயன்பாட்டிற்காக மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி திறந்து வைத்தார்.

கோவை செட்டிபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் பள்ளி மாணவர்களுக்கான விளையாட்டு மைதானம் மேம்படுத்தி தர வேண்டி கோவை மாவட்ட நிர்வாகத்திடம் ஏற்கனவே கோரிக்கை விடுக்கப்பட்டுருந்தது.

இதையடுத்து கோவை மாவட்ட நிர்வாகம், தனியார் நிறுவனமான வாக்-கரோ நிறுவனத்தின் சமூக நிதி பங்களிப்புடன் இணைந்து சுமார் 6.50 லட்சம் மதிப்பீட்டில் ஏற்கனவே இருந்த விளையாட்டு மைதானம் மேம்படுத்தப்பட்டு புதிதாக கால்பந்து அகடாமி அமைக்கபட்டு அதன் திறப்பு விழா நடைபெற்றது.



பள்ளி தலைமையாசிரியர் கிருஷ்ணவேணி தலைமையில் நடைபெற்ற விழாவில் கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி, செட்டிப்பாளையம் பேரூராட்சி தலைவர் இரங்கசாமி, வாக்-கரோ செயல் அலுவலர் நவ்சாத் உள்ளிடோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர்.



முன்னதாக மாணவர்களுக்கு கால்பந்தினை வழங்கிய மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி கால்பந்தை உதைத்து மைதானத்தை திறந்து வைத்தார்.

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தவர்,



தனியார் பங்களிப்புடன் இந்த மைதானம் சுமார் 6.50 லட்சம் ரூபாய் மதிப்பில் திறந்து வைத்துள்ளதாகவும், இதைபோல் மாவட்டத்தில் பல இடங்களிலும் இதைபோல் தனியார் பங்களிப்புடன் பள்ளி விளையாட்டு மைதானம் அமைக்கப்பட்டு வருவதாகவும், விளையாட்டு மைதானங்கள் இல்லாத பள்ளிகள் கணக்கு எடுக்கப்பட்டு கோவை மாவட்டத்தை பொறுத்தவரை மினி ஸ்டேடியம் அமைக்கபட உள்ளதாக கூறினார்.

தற்போது பொள்ளாச்சியில் மினி ஸ்டேடியம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டதாகவும், இதைபோல் தொகுதி வாரியாக மினி ஸ்டேடியம் பணி அமைப்பதற்காக இடம் தேர்வு செய்யும் பணி நடைபெற்று வருவதாக கூறியதுடன் இடங்கள் தேர்வு செய்யப்பட்டவுடன் மைதானங்கள் அமைக்க இருப்பதாக தெரிவித்தார்.

Newsletter

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...

பல ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் இல்லை: தேர்தலை புறக்கணிக்க நெறையூர் கிராம மக்கள் முடிவு

குடிநீர், சாலை, போக்குவரத்து, நியாய விலைக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் பல ஆண்டுகளாக வழங்கப்படாததால், திருப்பூர் மாவட்ட...

அவிநாசி: ‘ரோடு ஷோ’ மூலம் எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டிய மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ்..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், ரோடு ஷ...

கிணத்துக்கடவில் செந்தில் வேல் பரப்புரை - சபரி கார்த்திகேயனுக்கு வாக்கு சேகரித்தார்..!

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் கே.வி.கே.எஸ். சபரி கார்த்திகேயனை ஆதரித்து பத்திரிக்கையாளரும் தமிழ்கேள்வி யூடியூ...

கோவை மக்கள் ஏப்ரல் 23ஆம் தேதி செந்தில் பாலாஜியின் முகத்திரையை கிழிப்பார்கள்: அண்ணாமலை

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை, திமுக மீது...