மினி ஸ்டேடியம் தேர்வு பணி தீவிரம் - மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி பேட்டி

கோவையில் விளையாட்டு மைதானங்கள் இல்லாத அரசு பள்ளிகள் கணக்கெடுக்கபட்டு வருவதாகவும், தொகுதி வாரியாக மினி ஸ்டேடியம் அமைப்பதற்காக இடம் தேர்வு செய்யும் பணி நடைபெற்று வருவதாகவும், இடங்கள் தேர்வு செய்யப்பட்டவுடன் மைதானங்கள் அமைக்க இருப்பதாக மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி தெரிவித்தார்.



கோவை: கால்பந்தை உதைத்து தனியார் பங்களிப்புடன் அமைக்கப்பட்ட விளையாட்டு மைதானத்தை மாணவர்கள் பயன்பாட்டிற்காக மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி திறந்து வைத்தார்.

கோவை செட்டிபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் பள்ளி மாணவர்களுக்கான விளையாட்டு மைதானம் மேம்படுத்தி தர வேண்டி கோவை மாவட்ட நிர்வாகத்திடம் ஏற்கனவே கோரிக்கை விடுக்கப்பட்டுருந்தது.

இதையடுத்து கோவை மாவட்ட நிர்வாகம், தனியார் நிறுவனமான வாக்-கரோ நிறுவனத்தின் சமூக நிதி பங்களிப்புடன் இணைந்து சுமார் 6.50 லட்சம் மதிப்பீட்டில் ஏற்கனவே இருந்த விளையாட்டு மைதானம் மேம்படுத்தப்பட்டு புதிதாக கால்பந்து அகடாமி அமைக்கபட்டு அதன் திறப்பு விழா நடைபெற்றது.



பள்ளி தலைமையாசிரியர் கிருஷ்ணவேணி தலைமையில் நடைபெற்ற விழாவில் கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி, செட்டிப்பாளையம் பேரூராட்சி தலைவர் இரங்கசாமி, வாக்-கரோ செயல் அலுவலர் நவ்சாத் உள்ளிடோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர்.



முன்னதாக மாணவர்களுக்கு கால்பந்தினை வழங்கிய மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி கால்பந்தை உதைத்து மைதானத்தை திறந்து வைத்தார்.

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தவர்,



தனியார் பங்களிப்புடன் இந்த மைதானம் சுமார் 6.50 லட்சம் ரூபாய் மதிப்பில் திறந்து வைத்துள்ளதாகவும், இதைபோல் மாவட்டத்தில் பல இடங்களிலும் இதைபோல் தனியார் பங்களிப்புடன் பள்ளி விளையாட்டு மைதானம் அமைக்கப்பட்டு வருவதாகவும், விளையாட்டு மைதானங்கள் இல்லாத பள்ளிகள் கணக்கு எடுக்கப்பட்டு கோவை மாவட்டத்தை பொறுத்தவரை மினி ஸ்டேடியம் அமைக்கபட உள்ளதாக கூறினார்.

தற்போது பொள்ளாச்சியில் மினி ஸ்டேடியம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டதாகவும், இதைபோல் தொகுதி வாரியாக மினி ஸ்டேடியம் பணி அமைப்பதற்காக இடம் தேர்வு செய்யும் பணி நடைபெற்று வருவதாக கூறியதுடன் இடங்கள் தேர்வு செய்யப்பட்டவுடன் மைதானங்கள் அமைக்க இருப்பதாக தெரிவித்தார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...