வால்பாறை அரசு மருத்துவமனை அருகே சிறுத்தை நடமாட்டம் - மக்கள் அச்சம்!

வால்பாறை அரசு மருத்துவமனை வளாகத்தில் நேற்றிரவு 9 மணியளவில் உலா வந்த சிறுத்தையால், பொதுமக்கள், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் அச்சமடைந்து உள்ளனர். இதுகுறித்த சிசிடிவி காட்சிகள் வெளியான நிலையில், சிறுத்தையை உடனடியாக பிடிக்க வேண்டும் என வனத்துறைக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



கோவை: வால்பாறை அரசு மருத்துவமனை வளாகத்தில் உலா வந்த சிறுத்தையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் வனவிலங்கு நடமாட்டம் அதிகரித்து வருகிறது. இதில் சிறுத்தை, காட்டு யானை, கரடி, காட்டுப்பன்றி, போன்றவை குடியிருப்பு பகுதியில் சுற்றி வருவதால் அப்பகுதி மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.

இந்நிலையில் வால்பாறை அரசு மருத்துவமனை அருகே இரவு 9 மணி அளவில் மருத்துவமனை வளாக பகுதியில் சிறுத்தை ஒன்று சென்றுள்ளது. இது, அருகில் இருந்த கட்டிடத்தில் பொருத்தப்பட்டு இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது,

சுமார் ஒன்பது மணி அளவில் மருத்துவமனையில் இருந்து செவிலியர், மருத்துவர் வரும் பொழுதும், இரண்டு சக்கர வாகனம் வரும் பொழுதும் சிறுத்தை நடமாடியது மக்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

குடியிருப்பு பகுதியில் சிறுத்தை நடமாட்டத்தால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். குடியிருப்பு பகுதிக்குள் உலா வரும் சிறுத்தையை உடனடியாக வனத்துறையினர் பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை கொடுத்துள்ளனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...