ஒரே நாளில் அதிகப்படியான அபராதம் வசூலித்து சேலம் தெற்கு ரயில்வேத் துறை அதிகாரிகள் சாதனை

சமீபகாலமாக ரயில் பயணத்தின் போது பெரும்பாலான பயணிகள் பயணச்சீட்டு பெறாமலும், முறையற்ற பயணத்தில் ஈடுபட்டு வருவாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துவருகின்றன. அதனை தடுக்கும் வகையில் சேலம் தெற்கு ரயில்வேத் துறையின் சார்பில் ரயில் பயணிகளிடைய தொடர் சோதனைகளும், ரகசிய சோதனைகளும் நடைபெற்று வருகிறது.

அதன்படி சேலம் டிஆர்எம் ஸ்ரீ ஹரிசங்கர் வர்மா தலைமையில் கடந்த வாரம் ஞாயிறன்று பயணிகளிடையே சோதனை நடைபெற்றது. அதில், முறையாக பயணச்சீட்டு இல்லாமை, பார்சல் பொருட்களுக்கான டிக்கெட் இல்லாமை உள்ளிட்டு 2,47,025 ரூபாயும், 546 நபர்கள் பயணச்சீட்டு முன்பதிவு பெறாமை என 2,43,325 ரூபாயும் அபராதமாக வசூலிக்கப்பட்டது.

மேலும், இச்சோதனையில் அதிகப்படியான பொருட்களுக்கான அனுமதி சீட்டு பெறாததால் 12 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 4700 ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டது. இந்த ஒரு நாள் சோதனையில் அபராதமாக பெறப்பட்ட தொகையே சேலம் ரயில்வே கோட்டத்தினால் வசூலிக்கப்பட்ட அதிகப்படியான தொகை ஆகும். முன்னதாக 2016-யில் இதேப்போன்ற சோதனையில் சேலம் ரயில்வே கோட்டத்துறையால் 2,10,400 ரூபாய் வசூல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சேலம், ஈரோடு, திருப்பூர் மற்றும் கோவை ஆகிய பகுதிகளில் நடைபெற்ற இந்த சோதனையில் சிறப்புப் படை வீரர்கள் 18 பேர் உட்பட 216 அதிகாரிகள் ஈடுபட்டனர்.

மேலும், ரயில் பயணத்தின் போது முறையாக பயணச்சீட்டு பெறாமை, அதிகப்படியான பொருட்களை எடுத்துச் செல்லும் போது அதற்கான தொகை செலுத்தாமை உள்ளிட்ட குற்றச்செயல்கள் மீது தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் என சேலம் கோட்ட தெற்கு ரயில்வே டிஆர்எம் ஸ்ரீ ஹரிசங்கர் வர்மா தெரிவித்துள்ளார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...