நியாய விலைக்கடைகளில் மலிவு விலைப்பொருட்கள் முறையாக வழங்க கோரி தி.மு.க சிங்காநல்லூர் சட்டம்ன்ற தொகுதி எம்.எல்.ஏ. நா.கார்த்திக் இன்று கோவை மசக்காளி பாளையம் பகுதியில் உள்ள நியாய விலைக்கடையை முற்றுகையிட்டார். அவருடன் 50க்கும் மேற்பட்ட தி.மு.க உறுப்பினர்கள் கலந்து கொண்டு, நியாய விலைக்கடைகளில் முறையாக பொருட்களை வழங்க கோரி கோஷமிட்டனர்.
தொடர்ந்து, எம்.எல்.ஏ. நா.கார்த்திக் செய்தியாளர்களிடம் பேசியதாவது :-
எங்கள் கட்சியின் செயற்தலைவர் ஸ்டாலின் உத்தரவின் பேரில் அனைத்து தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்களும் அவர்கள் தொகுதிக்குட்பட்ட நியாய விலைக்கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர். அதன்படி மக்களுக்கு முறையாக பொருட்களை வழங்காத நியாய விலைக்கடைகளை முற்றுகையிடும் போராட்ட்ம் இன்று தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது. ஆளுங்கட்சி மக்கள் விரோத போக்கை கடைபிடித்து வருகிறது. அத்தியாவசிய பொருட்கள் மக்களை சென்றடைவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. உடனடியாக இந்த பிரச்சனைகள் சரி செய்யப்பட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட தி.மு.க வினர் மற்றும் எம்.எல்.ஏ.வை போலீசார் கைது செய்தனர்.