பல்லடம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி பொதுமக்கள் மனு!

பல்லடத்தில் கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை அருகே சாலையை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ள அடாவடியாக செயல்படும் டாஸ்மாக் கடையை அகற்ற வலியுறுத்தி, அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியர் மற்றும் நெடுஞ்சாலை துறையினரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.



திருப்பூர்: பல்லடம் அடுத்த திருச்சி நெடுஞ்சாலையில் உள்ள அடாவடிக்கு பெயர்போன ஆக்கிரமிப்பு டாஸ்மாக் கடையை அகற்ற கோரிக்கை நெடுஞ்சாலை துறை அதிகாரிகளை சந்தித்து பொதுமக்கள் மனு அளித்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலைக்கு மிக அருகே கொச்சின் நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. 1830 டாஸ்மாக் மதுக்கடை. அடாவடிக்கு பெயர்போன இந்த டாஸ்மாக் கடையினால் பொதுமக்கள், பெண்கள் கடுமையாக பாதிக்கப்படுவதாக கூறப்படுகிறது.

மேலும், மதுப்பிரியர்கள் போதையில் சாலையிலேயே அலங்காலமாக படுத்துக் கிடப்பதோடு சாலையில் செல்வோரிடம் அடாவடி செயலில் ஈடுபட்டுவருவதாக பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளனர்.

இதனை வலியுறுத்தி தொடர்ச்சியாக போராட்டங்கள் நடத்தியும் தங்களது எதிர்ப்பை தெரிவித்து வந்தனர். இதனிடையே அடாவடிக்கு பெயர்போன டாஸ்மாக் கடை எண் 1830 நெடுஞ்சாலையை ஆக்கிரமித்து கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.

இதனால் சாலையின் குறுக்கே வாகனங்களை தாறுமாறாக நிறுத்தி போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்துவதாகவும், உடனடியாக நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுத்து ஆக்கிரமிப்பில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் நெடுஞ்சாலை துறை அதிகாரிகளை சந்தித்து மனு அளித்தனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...