சந்திரயான்-3 நிலவில் வெற்றிகரமாக தரையிறக்கம் - கோவையில் இலவசமாக பிரியாணி வழங்கி கொண்டாட்டம்!

நிலவில் சந்திரயான் வெற்றிகரமாக தரையிறக்கி இஸ்ரோ விஞ்ஞானிகள் சாதனை புரிந்த நிலையில் மனசு நிறைந்தது போலவே வயிறு நிறைய வேண்டும் என கோவை சாய்பாபா காலனி அருகே உள்ள பிரியாணி கடை ஒன்றில் கடைக்கு வந்த வாடிக்கையாளர்களுக்கு பிரியாணி, சில்லி சிக்கன் இலவசமாக வழங்கி கொண்டாடப்பட்டுள்ளது.



கோவை: நிலவில் சந்திரயான் வெற்றிகரமாக தரையிறக்கப்பட்ட நிலையில் கோவையில் பிரியாணி கடை ஒன்றில் வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக பிரியாணி வழங்கி கொண்டாடப்பட்டுள்ளது.

உலகமே உற்று நோக்கி இந்தியாவின் இஸ்ரோ விஞ்ஞானிகள் செய்த மகத்தான பெரும் சாதனைகளை விழி மூடாமல் வியந்து பார்த்தனர். சந்திரனில் தென் துருவத்தில் இஸ்ரோ விஞ்ஞானிகளால் சந்திரயான் - 3 நிலை நிறுத்தப்பட்டவுடன், நாடே கொண்டாடி தீர்த்தது.

கோவையில் கல்லூரிகள், பொது இடங்களில் பொதுமக்கள் கேக் வெட்டி கொண்டாடினர்.



அந்த வகையில் கோவை சாய்பாபா காலனி பகுதியில் இயங்கும்பிரியாணி கடையில், வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக பிரியாணி வழங்கி சந்திரயான் வெற்றி கொண்டாடப்பட்டது.



இந்த கடையின் உரிமையாளரும், பல்சமய நல்லுறவு இயக்கத்தின் தலைவருமான ஜெ. முகமது ரஃபி, 300க்கு மேற்பட்ட வாடிக்கையாளர்களுக்கு பிரியாணி இலவசமாக வழங்கினார்.



இது குறித்து பிரியாணி கடை உரிமையாளர் முகமது ரஃபி கூறியதாவது, இந்தியா நாடு இன்று உலக அரங்கில் மகத்தான சாதனை புரிந்திருக்கின்றது. இந்தியாவின் இஸ்ரோ விண்வெளி இந்திய இயற்பியல் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் விஞ்ஞானிகள் குழு, நிலவின் தென் துருவத்தில் சந்திரயான் - 3 விண்கலத்தை தரை இறக்கியிருக்கிறது.

உலகிலேயே முதல் நாடாக இந்தியா பெருமைக்குறிய இந்த சாதனை செய்தது. இந்தியர்களாக இருக்கின்ற அனைவருக்கும் இது உலக அரங்கில் பெருமைப்பட வைத்திருக்கின்றது. இஸ்ரோ விஞ்ஞானிகள் செய்த இந்த சாதனையை இந்தியாவில் உள்ள அனைவரும் கொண்டாடி வருகின்றனர்.

இந்த நிலையில் சந்திரயான்வெற்றி இந்தியர்களின் மன நிறைவினை தந்த நிலையில், வயிறும் நிறைய வேண்டும் என்ற எண்ணத்தில் நாங்கள் நடத்துகின்ற பிரியாணி கடையில், வரும் வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக பிரியாணி வழங்கி கொண்டாடினோம்.

இந்தியாவின் இஸ்ரோ செய்த இந்த உலகம் போற்றும் மகத்தான சாதனையில், தமிழக விஞ்ஞானிகள் பெரும் பொறுப்பில் இருந்தது பெரும் மகிழ்ச்சியை தந்துள்ளது. நம் நாட்டின் உலக அளவிலான மரியாதை மென்மேலும் ஓங்க வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...