கோவை மாவட்டம், கிணத்துக்கடவு பகுதியில் தொடர்ந்து அதிக்கசாதியினரால் தாக்கப்படுவதாகவும், காவல்துறையும் இதற்கு உடந்தையாக செயல்படுவதாகவும் கூறி ஆதித்தமிழர் பேரவையின் மாவட்ட அமைப்புச் செயலாளர் தாமரை வீரன், கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.

இதுகுறித்து, அவர் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:-
கோவை மாவட்டம், கிணத்துக்கடவிற்கு உட்பட்ட தாமரைக்குளம், ரொட்டிக்கடை பகுதியில் நானும், எனது தம்பி முருகன் ஆகிய இருவரும் குடும்பத்துடன் வசித்து வருகிறோம். நாங்கள் தாழ்த்தப்பட்ட அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். நான் கோவை மாவட்ட ஆதித்தமிழர் பேரவையின் மாவட்ட அமைப்புச் செயலாளராக பணியாற்றி வருகிறேன். மேலும், சுயமாக தொழில் துவங்கி நடத்தி வருகின்றேன்.
நாங்கள் வசிக்கும் பகுதியில் ஆதிக்கச்சாதியைச் சேர்ந்த 7 குடும்பத்தினர் ஒன்றிணைந்து எங்களை எப்படியும் அப்பகுதியில் இருந்து வெளியேற்ற நெருக்கடிகளைக் கொடுத்து வருகின்றனர்.
இதுகுறித்து பல்வேறு புகார்கள் கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. மேலும், கடந்த 7.3.2017 அன்று எனது மனைவி மீது அப்பகுதி ஆதிக்கசாதியினர் திடீரென தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் காயமடைந்த எனது மனைவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதுகுறித்து புகார் மனுவை கிணத்துக்கடவு காவல் நிலையத்தில் அளித்தபோது காவல்துறையினர் எங்கள் மீதே வழக்கை பதிவு செய்து மிரட்டியதால் அதுகுறித்தான புகாரினை கோவை மண்டல ஐஜி-யிடம் வழங்கியுள்ளேன்.
இச்சம்பவங்களுக்கு பின்புலமாக இருந்து செயல்படுபவர் கிணத்துக்கடவு காவல்நிலையத்தில் பணியாற்றி, தற்போது ஆனைமலை காவல்நிலையத்திற்கு பணியிடமாற்றம் பெற்றுள்ள சார்பு ஆய்வாளர் செல்வநாயகம். இவர்கள் அனைவரும் ஒன்றிணைந்தே எங்களது குடும்பத்தினர் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து பலமுறை மனு அளித்தும் உரிய விசாரணை மேற்கொள்ளாமல் எங்களையே வஞ்சித்து வருகின்றனர். எனவே, கோவை மாவட்ட ஆட்சியர் இதுகுறித்து உரிய விசாரணை மேற்கொண்டு தக்க தீர்வை ஏற்படுத்த வேண்டும் என அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, பலமுறை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் அம்மனுக்களை இணைத்து தலையில் முக்காடாக போட்டு மாவட்ட ஆட்சியரிடம் தாமரை வீரன் மனு அளித்தது சிறிது பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து, அவர் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:-
கோவை மாவட்டம், கிணத்துக்கடவிற்கு உட்பட்ட தாமரைக்குளம், ரொட்டிக்கடை பகுதியில் நானும், எனது தம்பி முருகன் ஆகிய இருவரும் குடும்பத்துடன் வசித்து வருகிறோம். நாங்கள் தாழ்த்தப்பட்ட அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். நான் கோவை மாவட்ட ஆதித்தமிழர் பேரவையின் மாவட்ட அமைப்புச் செயலாளராக பணியாற்றி வருகிறேன். மேலும், சுயமாக தொழில் துவங்கி நடத்தி வருகின்றேன்.
நாங்கள் வசிக்கும் பகுதியில் ஆதிக்கச்சாதியைச் சேர்ந்த 7 குடும்பத்தினர் ஒன்றிணைந்து எங்களை எப்படியும் அப்பகுதியில் இருந்து வெளியேற்ற நெருக்கடிகளைக் கொடுத்து வருகின்றனர்.
இதுகுறித்து பல்வேறு புகார்கள் கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. மேலும், கடந்த 7.3.2017 அன்று எனது மனைவி மீது அப்பகுதி ஆதிக்கசாதியினர் திடீரென தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் காயமடைந்த எனது மனைவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதுகுறித்து புகார் மனுவை கிணத்துக்கடவு காவல் நிலையத்தில் அளித்தபோது காவல்துறையினர் எங்கள் மீதே வழக்கை பதிவு செய்து மிரட்டியதால் அதுகுறித்தான புகாரினை கோவை மண்டல ஐஜி-யிடம் வழங்கியுள்ளேன்.
இச்சம்பவங்களுக்கு பின்புலமாக இருந்து செயல்படுபவர் கிணத்துக்கடவு காவல்நிலையத்தில் பணியாற்றி, தற்போது ஆனைமலை காவல்நிலையத்திற்கு பணியிடமாற்றம் பெற்றுள்ள சார்பு ஆய்வாளர் செல்வநாயகம். இவர்கள் அனைவரும் ஒன்றிணைந்தே எங்களது குடும்பத்தினர் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து பலமுறை மனு அளித்தும் உரிய விசாரணை மேற்கொள்ளாமல் எங்களையே வஞ்சித்து வருகின்றனர். எனவே, கோவை மாவட்ட ஆட்சியர் இதுகுறித்து உரிய விசாரணை மேற்கொண்டு தக்க தீர்வை ஏற்படுத்த வேண்டும் என அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, பலமுறை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் அம்மனுக்களை இணைத்து தலையில் முக்காடாக போட்டு மாவட்ட ஆட்சியரிடம் தாமரை வீரன் மனு அளித்தது சிறிது பரபரப்பை ஏற்படுத்தியது.