கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட மூன்று பேர் கையும் களவுமாக கைது - வாகன சோதனையின் போது காவல்துறையில் சிக்கிய கும்பல்

திருப்பூரில் ஒர்க் ஷாப்பில் பணியாற்றுக்கொண்டு கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட மூன்று பேரை காவல்துறையினர் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். பின்னர், அவர்களிடம் இருந்த 2 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.


திருப்பூர்: உடமையில் மறைத்து வைத்துக்கொண்டு கஞ்சா விற்பனையில் மூன்று பேர் ஈடுபட்டனர். அவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். இதேபோல், 25 கிலோ புகையிலை பொருட்களை வைத்திருந்த மேலும் ஒருவரும் காவல்துறையில் பிடிப்பட்டுள்ளார்.

திருப்பூர் கல்லாங்காடு பகுதியில் வீரபாண்டி காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியே சந்தேகத்திற்கு இடமாக வந்து கொண்டிருந்த மூன்று பேரை மடக்கி விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளனர். சந்தேகத்தின் அடிப்படையில் அவர்களை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்போது, அவர்களது உடைமைகளை சோதனை செய்தபோது இரண்டு கிலோ கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.



உடனடியாக காவல்துறையினர் கஞ்சா வைத்திருந்த கல்லாங்காடு பகுதியைச் சேர்ந்த சரண், முத்துக்குமார், மணிகண்டன் ஆகிய மூன்று பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

இவர்கள் மூன்று பேரும் அப்பகுதியில் ஒர்க்ஷாப்பில் வேலை பார்த்துக்கொண்டே கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்துள்ளது. இதேபோல் மீனாம்பாறை பகுதியில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது இருசக்கர வாகனத்தில் வந்த நபர் போலீசாரை கண்டதும் தப்பியோட முயற்சி செய்துள்ளார்.



அவரை சுற்றி வளைத்து பிடித்து விசாரணை மேற்கொண்டபோது அவர் 25 கிலோ புகையிலை பொருட்கள் வைத்திருப்பது தெரியவந்தது.



உடனடியாக புகையிலைப் பொருட்களை விற்பனைக்கு கொண்டு வந்த சித்திக் என்பவரை காவல்துறையினர் கைது செய்து அவரிடமிருந்த புகையிலை பொருட்களையும் மற்றும் இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்துள்ளனர்.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...