தேமுதிக தலைவர் விஜயகாந்தின் 71வது பிறந்தநாள் - பெரியநாயக்கன்பாளையத்தில் கட்சி கொடியேற்றி கொண்டாட்டம்!

தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்தின் 71வது பிறந்தநாள் விழாவை ஒட்டி பெரியநாயக்கன்பாளையம் கிழக்கு ஒன்றிய தேமுதிக சார்பில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் கட்சிக் கொடி ஏற்றியும், பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கியும் உற்சாகமாக கொண்டாடினர்.


கோவை: தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்தின் 71வது பிறந்தநாள் விழாவை ஒட்டி கோவை பெரியநாயக்கன்பாளையத்தில் தேமுதிகவினர் கட்சிக் கொடி ஏற்றி பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினர்.

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைவர் கேப்டன் விஜயகாந்தின் 71வது பிறந்தநாளை அவரது ரசிகர்கள் மற்றும் கட்சித் தொண்டர்கள் வெகு விமர்சையாக கொண்டாடி வருகின்றனர்.



இதன் ஒரு பகுக்தியாக கோவை பெரியநாயக்கன்பாளையம் கிழக்கு ஒன்றியம் சார்பாக விஜயகாந்தின் பிறந்தநாளை ஒட்டி 10க்கும் மேற்பட்ட இடங்களில் கட்சிக் கொடி ஏற்றி பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினர்.

செங்காளிபாளையம் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் சக்கையா தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக கோவை வடக்கு மாவட்ட செயலாளர் கே.எஸ்.சண்முகவடிவேல் கலந்துக்கொண்டு கட்சி கொடியினை ஏற்றி வைத்து இனிப்புகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சிக்கு வார்டு கவுன்சிலர் ஜெயப்பிரியா சக்கையா முன்னிலை வகித்தார். இந்த நிகழ்ச்சியில் பெரியநாயக்கன்பாளையம் கிழக்கு ஒன்றியம் காந்தி காலனி கிளையில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.



தொடர்ந்து என்.ஜி.ஜி.ஓ காலனி 4 ரோடு, ரங்கம்மாள் காலனி, வட்டமலைபாளையம் பாலாஜி நகர், கணபதி காலனி உள்ளிட்ட பகுதிகளும் அன்னதானம் வழங்கப்பட்டது.



அதேபோல் விஜயகாந்தின் பிறந்தநாளை ஒட்டி பெரியநாயக்கன்பாளையம் கிழக்கு ஒன்றியம் சார்பில் நகரின் பல்வேறு இடங்களில் விஜயகாந்தை வாழ்த்தி போஸ்டர்கள் மற்றும் சுவர் ஓவியங்களை வரைந்திருந்தனர்.



இந்த நிகழ்ச்சிகளில் கட்சி மாவட்ட நிர்வாகிகள் ஜாகீர் உசேன், கணுவாய் ராஜன், எஸ்.வேல்ராஜ், ஆர்.ராஜா, கே.பி.சாகுல் ஹமித், ரவிக்குமார், எஸ்.கருணாநிதி, ராஜராஜேஸ்வரி, ஒன்றிய நிர்வாகிகள் அவைத்தலைவர் முருகன், பொருளாளர் தங்கதுரை, துணை செயலாளர்கள் பாக்கியராஜ், லட்சுமணன், மோகன்ராஜ், உமையாள், ரேவதி, ஆர்.ஜி.துரை, ராஜன், சூளைமான், தனபால், கே.பாக்கியராஜ், புனிதவள்ளி, ஆறுமுகம், நாகராஜ், கே.பாலாஜி, ஊராட்சி செயலாளர் கஜேந்திரன் உட்பட கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Newsletter

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...