குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் கடையை அனுமதிக்க கூடாது என மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு



மதுக்கரை மார்கெட் பைபாஸ் அருகில் செயல்பட்டு வரும் மதுபானக் கடையினை (எண் 1761) இடம் மாற்றி திருமுருகன் நகர் குடியிருப்பு பகுதியில் அமைக்க டாஸ்மாக் நிறுவாகம் முடிவு செய்துள்ளது.

இப்பகுதியானது பொதுமக்கள் அதிகம் வசிக்கும் பகுதி என்பதாலும், விவசாய தோட்டங்களுக்கு செல்ல இந்த டாஸ்மாக் கடையை தாண்டி தான் மக்கள் செல்ல வேண்டி உள்ளதாலும் இதனால் அப்பகுதி பெண்கள் மற்றும் குழந்தைகள் பெரிதும் பாதிப்படைவர். 

மேலும், இந்த டாஸ்மாக் கடை அமையவுள்ள இடத்தின் அருகே தனியார் பள்ளி மற்றும் கல்லூரிகளும் செயல்பட்டு வருகிறது. 

எனவே, இந்த டாஸ்மாக் கடை இங்கு அமையும் பட்சத்தில் இங்குள்ள பொதுமக்களுக்கு பெரியளவிலான இடையூறுகளை ஏற்படுத்தும். 



எனவே, குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் கடையினை அமைப்பதை தடுத்து நிறுத்த மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என திருமுருகள் நகர் மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் அளித்துள்ள மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...