வசந்த காலத்தை வரவேற்கும் வகையில் வடமாநிலங்களில் கொண்டாடப்படும் ஹோலி பண்டிகையை கோவையில் வசிக்கும் வடமாநில மக்கள் உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர்.
அரக்கன் இரன்யகசிபுவின் சகோதரியான ஹோலிகா எரித்து கொல்லப்பட்ட நிகழ்வை வசந்த கால வரவாக வடமாநில மக்கள் ஹோலி பண்டிகையாக கொண்டாடி வருகின்றனர்.
இந்நாளில் வாழ்வில் வண்ணங்கள் சேரும் வகையில் ஒருவர் மீது ஒருவர் வண்ண பொடிகளையும், வண்ண கலவைகளையும் வீசியும் பூசியும் மக்கள் மகிழ்வது வழக்கம்.
இதன் படி கோவையில் வசித்து வரும் வடமாநில மக்கள் ஹோலி பண்டிகையை உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர்.
கோவை ஆர்.எஸ்.புரம், சுக்ரவார்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வசிக்கும் மக்கள் தங்களது உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் வண்ண வண்ண பொடிகளை தூவியும், இந்தி பாடல்களுக்கு உற்சாகமாக நடனமாடியும் இந்த பண்டிகையை கொண்டாடினர்.
இதுகுறித்து அவர்கள் கூறுகையில் இம்முறை தமிழகம் முழுவதும் கடுமையான குடிநீர் பஞ்சம் நிலவுவதால் தண்ணீரை மிச்சப்படுத்தும் வகையில் வண்ண பொடிகள் மற்றும் மலர்களை தூவி மட்டும் ஹோலி பண்டிகையை கொண்டாடுவதாக தெரிவித்தனர்.
அரக்கன் இரன்யகசிபுவின் சகோதரியான ஹோலிகா எரித்து கொல்லப்பட்ட நிகழ்வை வசந்த கால வரவாக வடமாநில மக்கள் ஹோலி பண்டிகையாக கொண்டாடி வருகின்றனர்.
இந்நாளில் வாழ்வில் வண்ணங்கள் சேரும் வகையில் ஒருவர் மீது ஒருவர் வண்ண பொடிகளையும், வண்ண கலவைகளையும் வீசியும் பூசியும் மக்கள் மகிழ்வது வழக்கம்.
இதன் படி கோவையில் வசித்து வரும் வடமாநில மக்கள் ஹோலி பண்டிகையை உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர்.
கோவை ஆர்.எஸ்.புரம், சுக்ரவார்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வசிக்கும் மக்கள் தங்களது உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் வண்ண வண்ண பொடிகளை தூவியும், இந்தி பாடல்களுக்கு உற்சாகமாக நடனமாடியும் இந்த பண்டிகையை கொண்டாடினர்.
இதுகுறித்து அவர்கள் கூறுகையில் இம்முறை தமிழகம் முழுவதும் கடுமையான குடிநீர் பஞ்சம் நிலவுவதால் தண்ணீரை மிச்சப்படுத்தும் வகையில் வண்ண பொடிகள் மற்றும் மலர்களை தூவி மட்டும் ஹோலி பண்டிகையை கொண்டாடுவதாக தெரிவித்தனர்.