கோவையை வண்ணமயமாக அலங்கரித்த வடமாநில ஹோலி

வசந்த காலத்தை வரவேற்கும் வகையில் வடமாநிலங்களில் கொண்டாடப்படும் ஹோலி பண்டிகையை கோவையில் வசிக்கும் வடமாநில மக்கள் உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர்.

அரக்கன் இரன்யகசிபுவின் சகோதரியான ஹோலிகா எரித்து கொல்லப்பட்ட நிகழ்வை வசந்த கால வரவாக வடமாநில மக்கள் ஹோலி பண்டிகையாக கொண்டாடி வருகின்றனர்.

இந்நாளில் வாழ்வில் வண்ணங்கள் சேரும் வகையில் ஒருவர் மீது ஒருவர் வண்ண பொடிகளையும், வண்ண கலவைகளையும் வீசியும் பூசியும் மக்கள் மகிழ்வது வழக்கம்.

இதன் படி கோவையில் வசித்து வரும் வடமாநில மக்கள் ஹோலி பண்டிகையை உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர். 

கோவை ஆர்.எஸ்.புரம், சுக்ரவார்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வசிக்கும் மக்கள் தங்களது உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் வண்ண வண்ண பொடிகளை தூவியும், இந்தி பாடல்களுக்கு உற்சாகமாக நடனமாடியும் இந்த பண்டிகையை கொண்டாடினர்.

இதுகுறித்து அவர்கள் கூறுகையில் இம்முறை தமிழகம் முழுவதும் கடுமையான குடிநீர் பஞ்சம் நிலவுவதால் தண்ணீரை மிச்சப்படுத்தும் வகையில் வண்ண பொடிகள் மற்றும் மலர்களை தூவி மட்டும் ஹோலி பண்டிகையை கொண்டாடுவதாக தெரிவித்தனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...