சென்னை கோர்ட்டு தீர்ப்புக்கு வரவேற்பு - தாராபுரத்தில் அ.தி.மு.க.வினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழுக்கூட்டம் செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை வரவேற்று தாராபுரத்தில் அதிமுகவினர் இனிப்பு வழங்கி கொண்டாடி மகிழ்ந்தனர்.


திருப்பூர்: தாராபுரம் அண்ணா சிலை முன்பு நகர செயலாளர் சி.ராஜேந்திரன் தலைமையில் நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்று அ.தி.மு.க.வினர் நேற்று மாலையில் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர்.



அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா மறைவுக்கு பின்பு அ.தி.மு.க.வில் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வமும், துணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிச்சாமியும் இருந்து வந்தனர். கட்சியில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அ.தி.மு.க. இரண்டு அணியாக பிரிந்து செயல்பட்டு வந்தது.

எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டப்பட்டு அதில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஓ.பி.எஸ். உள்ளிட்ட 4 பேரை கட்சியிலிருந்து நீக்கம் செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் சென்னை உயர் நீதிமன்றத்தில்மனுதாக்கல் செய்தனர்.

அதில் நேற்று சென்னை உயர் நீதிமன்றம் எடப்பாடி பழனிச்சாமி கூட்டிய பொதுக்குழு கூட்டம் செல்லும். 4 பேரை நீக்கியது செல்லும் என தீர்ப்பளித்தது.



இதையொட்டி தாராபுரம் அண்ணா சிலை முன்பு நகர செயலாளர் சி.ராஜேந்திரன் தலைமையில் அ.தி.மு.க.வினர் நேற்று மாலையில் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடி மகிழ்ந்தனர்.

அப்போது மாவட்ட மகளிர் அணி துணை செயலாளர் கவுரி சித்ரா முருகேசன், மாவட்ட கவுன்சிலர் பானுமதி கருணாகரன், நகர பொருளாளர் சாமுவேல், அம்மா பேரவை செயலாளர் கே.என். ராமசாமி, மாவட்ட பிரதிநிதி கோல்டன் ராஜ், முன்னாள் நகர மன்ற உறுப்பினர் அரசு குமாரன், மலை மாரிமுத்து, தினேஷ் குமார், இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் கே.ஆர்.சதீஷ், மின்சார பிரிவு அண்ணா தொழிற்சங்க தலைவர் பரணிகுமார், ஸ்டுடியோ கார்த்திக், லிட்டில் ராஜேந்திரன், வார்டு செயலாளர்கள் கணேசன், ராஜேஸ்வரி, செல்வி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...