வால்பாறை சுற்றுலா தலங்களில் அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் - சுற்றுலா பயணிகள் கோரிக்கை!

வால்பாறையில் உள்ள சின்னக்கல்லார் நீர்வீழ்ச்சி, கூழாங்கல் ஆறு, வெள்ளை மலை டனல் உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா தலங்களில் அதிநவீன கழிப்பறை. உடைமாற்றும் அறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நகராட்சி நிர்வாகம் செய்து தர வேண்டும் என சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


கோவை: வால்பாறையில் உள்ள சுற்றுலா தலங்களில் கழிப்பறை மற்றும் உடை மாற்றும் அறை ஆகிய அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் சுற்றுலா பயணிகள் அதிகம் வரும் இடங்கள் உள்ளன. இவற்றில் சோலையார் அணை,நீரார் அணை, சின்னக்கல்லார் நீர்வீழ்ச்சி, கூழாங்கல் ஆறு, வெள்ளைமலை டனல், மற்றும் இயற்கை எழில் கொஞ்சும் தேயிலை தோட்டங்கள் உள்ளன,

இதை சுற்றி பார்க்க பல்வேறு இடங்களில் இருந்தும், மாநிலங்களில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர், அதிக சுற்றுலா பயணிகள் வரும் இடமான கூழாங்கல் ஆறு பகுதியில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தண்ணீரில் விளையாடி பொழுது போக்குகின்றனர்.

இந்த இடங்களில் பெண்கள் உடை மாற்றுவதற்கும் கழிப்பறை வசதி இல்லாமலும் சுற்றுலா பயணிகள் சிரமப்படுகின்றனர், கூழாங்கல் ஆற்றுப்பகுதியில் அதி நவீன கழிப்பறையும். உடைமாற்றும் அறையும் நகராட்சி நிர்வாகம் கட்டித் தருவதற்கு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் குழந்தைகள் பெரியவர்கள் தண்ணீரில் விளையாடுவதால் திடீரென்று வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளதால் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...