கோவை, டவுன்ஹால் அருகே சாலையோரத்தில் வசித்து வரும் குடும்பத்தினர் இலவச வீட்டுமனை வழங்கக் கோரி இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

கோவை டவுன்ஹால் பகுதியில் மணிக்கூட்டு பின்புறம் சாலையோரத்தில் வசித்து வருபவர் சலீம் பாட்ஷா. உடல் ஊனமுற்ற இவருக்கு திருமணமாகி 4 பெண் குழந்தைகள் உள்ளது.
பெண் பிள்ளைகளை வைத்துக்கொண்டு சாலையில் தங்குவது சிரமமாக உள்ளது எனவும், சாலையோரத்தில் வசித்து வரும் எங்களுக்கு இலவச வீட்டுமனை ஒன்று வழங்க வேண்டும் எனவும் சாதிக் பாட்ஷா இன்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.
மேலும், எங்களுக்கு குடும்ப அட்டை, ஆதார் உள்ளிட்ட எவ்வித அடையாள அட்டைகளும் இல்லை என்பதால் அதனையும் பெற்றுத் தர மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் அம்மனுவில் தெரிவித்துள்ளார்.
இதேப்போன்று காந்திபார்க் பகுதியில் சாலையில் வசித்து வரும் மீனாட்சி உள்ளிட்ட குடும்பத்தினரும் தங்களுக்கு இலவச வீட்டுமனை வேண்டி ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.

அதில், தாங்கள் காந்திபார்க் அருகே சாலையோரத்தில் 20 வருடங்களுக்கும் மேலாக வசித்து வருவதாகவும், சாட்டையடித்து தொழில் செய்து வருவதாகவும், எங்களுக்கு இலவச வீட்டுமனை வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
மேலும், குழந்தைகளை பள்ளிக்குச் செல்ல மாவட்ட நிர்வாகம் வழிவகை செய்ய வேண்டும் எனவும் அம்மனுவில் தெரிவித்துள்ளனர்.

கோவை டவுன்ஹால் பகுதியில் மணிக்கூட்டு பின்புறம் சாலையோரத்தில் வசித்து வருபவர் சலீம் பாட்ஷா. உடல் ஊனமுற்ற இவருக்கு திருமணமாகி 4 பெண் குழந்தைகள் உள்ளது.
பெண் பிள்ளைகளை வைத்துக்கொண்டு சாலையில் தங்குவது சிரமமாக உள்ளது எனவும், சாலையோரத்தில் வசித்து வரும் எங்களுக்கு இலவச வீட்டுமனை ஒன்று வழங்க வேண்டும் எனவும் சாதிக் பாட்ஷா இன்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.
மேலும், எங்களுக்கு குடும்ப அட்டை, ஆதார் உள்ளிட்ட எவ்வித அடையாள அட்டைகளும் இல்லை என்பதால் அதனையும் பெற்றுத் தர மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் அம்மனுவில் தெரிவித்துள்ளார்.
இதேப்போன்று காந்திபார்க் பகுதியில் சாலையில் வசித்து வரும் மீனாட்சி உள்ளிட்ட குடும்பத்தினரும் தங்களுக்கு இலவச வீட்டுமனை வேண்டி ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.

அதில், தாங்கள் காந்திபார்க் அருகே சாலையோரத்தில் 20 வருடங்களுக்கும் மேலாக வசித்து வருவதாகவும், சாட்டையடித்து தொழில் செய்து வருவதாகவும், எங்களுக்கு இலவச வீட்டுமனை வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
மேலும், குழந்தைகளை பள்ளிக்குச் செல்ல மாவட்ட நிர்வாகம் வழிவகை செய்ய வேண்டும் எனவும் அம்மனுவில் தெரிவித்துள்ளனர்.