இலவச வீட்டுமனை வழங்கக் கோரி சாலையோர வாசிகள் ஆட்சியரிடம் மனு

கோவை, டவுன்ஹால் அருகே சாலையோரத்தில் வசித்து வரும் குடும்பத்தினர் இலவச வீட்டுமனை வழங்கக் கோரி இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.



கோவை டவுன்ஹால் பகுதியில் மணிக்கூட்டு பின்புறம் சாலையோரத்தில் வசித்து வருபவர் சலீம் பாட்ஷா. உடல் ஊனமுற்ற இவருக்கு திருமணமாகி 4 பெண் குழந்தைகள் உள்ளது. 

பெண் பிள்ளைகளை வைத்துக்கொண்டு சாலையில் தங்குவது சிரமமாக உள்ளது எனவும், சாலையோரத்தில் வசித்து வரும் எங்களுக்கு இலவச வீட்டுமனை ஒன்று வழங்க வேண்டும் எனவும் சாதிக் பாட்ஷா இன்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.

மேலும், எங்களுக்கு குடும்ப அட்டை, ஆதார் உள்ளிட்ட எவ்வித அடையாள அட்டைகளும் இல்லை என்பதால் அதனையும் பெற்றுத் தர மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் அம்மனுவில் தெரிவித்துள்ளார்.

இதேப்போன்று காந்திபார்க் பகுதியில் சாலையில் வசித்து வரும் மீனாட்சி உள்ளிட்ட குடும்பத்தினரும் தங்களுக்கு இலவச வீட்டுமனை வேண்டி ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். 



அதில், தாங்கள் காந்திபார்க் அருகே சாலையோரத்தில் 20 வருடங்களுக்கும் மேலாக வசித்து வருவதாகவும், சாட்டையடித்து தொழில் செய்து வருவதாகவும், எங்களுக்கு இலவச வீட்டுமனை வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

மேலும், குழந்தைகளை பள்ளிக்குச் செல்ல மாவட்ட நிர்வாகம் வழிவகை செய்ய வேண்டும் எனவும் அம்மனுவில் தெரிவித்துள்ளனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...