கோவையில் அனல் பறக்க நடந்த கார், பைக் ரேஸ் - மெய்மறந்து பார்த்த பார்வையாளர்கள்

கோவையில் எஃப் எம் எஸ் சி ஐ எனப்படும் இந்திய மோட்டார் விளையாட்டு கூட்டமைப்பு மற்றும் பிரபல நிறுவனமான ஜேகே டயர் நிறுவனத்தின் சார்பில் கார்,பைக் ரேஸ் நடைபெற்றது. இதில் அனல் பறக்க சென்ற வீர்ர், வீராங்கனைகளை சாலையில் இருபுறங்களிலும் நின்றிருந்த பார்வையாளர்கள் ஆரவாரத்துடன் கண்டுகளித்தனர்.



கோவை: கார் பந்தயம் மற்றும் இருசக்கர வாகன சாம்பியன்ஷிப் போட்டியில் தில்ஜித், திஜில் ராவ், ருகான் ஆல்வா மற்றும் சென்னையை சேர்ந்த ராகுல் ரங்கசாமி, கோவையைச் சேர்ந்த யோகேஸ்வரன், பரோஸ் பட்டாரியா மற்றும் பெண் வீராங்கனையான மிரா எர்டா உள்ளிட்ட பலர் பந்தயத்தில் கலந்து கொண்டனர்.



எஃப் எம் எஸ் சி ஐ எனப்படும் இந்திய மோட்டார் விளையாட்டு கூட்டமைப்பு மற்றும் பிரபல நிறுவனமான ஜேகே டயர் நிறுவனத்தின் சார்பில் ஆண்டுதோறும் தேசிய அளவிலான கார் பந்தயம் மற்றும் இருசக்கர வாகன சாம்பியன்ஷிப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

அதன் அடிப்படையில் 26-வது ஆண்டு தேசிய சாம்பியன்ஷிப் போட்டிகள் நாடு முழுவதும் பல்வேறு சுற்றுகளாக நடத்த திட்டமிடப்பட்டு, அதன் முதல் சுற்று போட்டிகள் கோவை செட்டிபாளையம் பகுதியில் உள்ள கரி மோட்டார் ஸ்பீடுவே வளாகத்தில் ஆரம்பமானது.



ஜேகே டயர் நோவிஸ் கோப்பைக்கா கார் பந்தயம், எல்ஜிபி ஃபார்முலா-4 கார் பந்தயம் மற்றும் ராயல் என்ஃபீல்டு கான்டினென்டல் ஜிடி கோப்க்கான இருசக்கர வாகன பந்தயம் என மூன்று பிரிவுகளாக இந்த போட்டிகள் நடத்தப்பட்டன.

10 சுற்று 15 சுற்று என வெவ்வேறு வகையில் போட்டிகள் நடத்தப்பட்ட நிலையில், தேசிய அளவில் சிறந்த கார்பந்தய வீரர்களான தில்ஜித், திஜில் ராவ், ருகான் ஆல்வா மற்றும் சென்னையை சேர்ந்த ராகுல் ரங்கசாமி, கோவையைச் சேர்ந்த யோகேஸ்வரன், பரோஸ் பட்டாரியா மற்றும் பெண் வீராங்கனையான மிரா எர்டா உள்ளிட்ட பலர் பந்தயத்தில் கலந்து கொண்டனர்.

ஒவ்வொரு பிரிவிலும் 20 பேர் என பங்கேற்று போட்டிகள் நடத்தப்பட்ட சூழலில் வீரர்கள் மின்னல் வேகத்தில் வாகனங்களை இயக்கி பார்வையாளர்களை பரவசப்படுத்தினர்.

முதல் சுற்று போட்டிகள் கோவையில் நடத்தப்பட்டு அதில் வெற்றி பெறும் வீரர், வீராங்கனைகளுக்கு அடுத்தடுத்த சுற்றுகள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடத்தப்பட உள்ளது.



அனல் பறக்க நடந்த இந்த ரேசில், சீறிப்பாய்ந்த கார், பைக் வாகனங்களை பார்வையாளர்கள் மெய்சிலிர்த்து பார்த்தது ரசித்தனர்.

Newsletter

கோவையில் செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப சிதம்பரம் பரப்புரை..!

NDA ஆட்சி அமைந்தால், பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ் குமாருக்கு ஏற்பட்ட அரசியல் சூழ்நிலை போன்று தமிழகத்திலும் நிலைமை உரு...

கோவையில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சி தீவிர பிரச்சாரம்

கோவையில் தொண்டாமுத்தூர், தெற்கு, வடக்கு தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சியின் மாநில ப...

பீடம்பள்ளி ஊராட்சியில் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் விழா: திமுக செயலாளர் மரியாதை

கோவை தெற்கு மாவட்டம் சூலூர் தெற்கு ஒன்றியத்தின் பீடம்பள்ளி ஊராட்சியில் அண்ணல் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் நிகழ்வில் தி...

சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" படம் வெளியீடு – கோவை உள்ளூர் சேனல் உரிமையாளர் கைது

கோவை கருமத்தம்பட்டியில் "ராசி பிரைம் மூவி" சேனல் உரிமையாளர் பழனிச்சாமி (44), மத்திய தணிக்கை சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" த...

தவெக தலைவர் விஜய் இன்று கோவை வருகை - திருப்பூர் பெருமாநல்லூரில் தீவிர பிரச்சாரம்

தமிழக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக தவெக தலைவர் விஜய் இன்று தனி விமானம் மூலம் கோவை வந்து திருப்பூர் பெருமாநல்லூரில்...

தொண்டாமுத்தூரில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பு பிரசாரம்

தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக திமுக தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டனர...