குண்டடம் சந்தைக்கு மாடுகள் வரத்து அதிகரிப்பு - விலை வீழ்ச்சி, விவசாயிகள் கவலை

வறட்சி காரணமாக குண்டடம் சந்தைக்கு மாடுகளின் வரத்து அதிகமான காணப்பட்டது. 60 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையான மாடுகள், இந்த வாரம் 40 ஆயிரம் ரூபாய்க்கு மட்டுமே விற்பனையானதால் விவசாயிகள் கலக்கமடைந்துள்ளனர்.


திருப்பூர்: கேரளாவில் ஓணம் பண்டிகை விமர்ரிசையாக கொண்டாடப்படுவதாலும், இறைச்சி தேவை அதிகம் இல்லாததாலும், கேரளா வியாபாரிகள் அதிகளவில் மாடுகளை வாங்காததால் மாடுகளின் விலை குறைந்துள்ளதாக வியபாரிகள் தெரிவித்தனர்.

திருப்பூர் மாவட்டம் குண்டடம் மாட்டு சந்தைக்கு குண்டடம், காங்கயம், கோவை, உடுமலை, பல்லடம், திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் மாடுகளை விற்பனைக்காக கொண்டு வருகின்றனர்.

கேரளா, பொள்ளாச்சி, கோவை, ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் வந்து மாடுகளை வாங்கிச்செல்கின்றனர். தவிர விவசாயிகளும் வந்து வளர்ப்பு மாடுகளை வாங்கிச் செல்கின்றனர்.

இந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வரை 7 முதல் 10 லிட்டர் வரை பால் கொடுக்கும் ஜெர்சி மாடு ரூ.60 ஆயிரம் வரை விலை போனது. ஆனால் தற்போது வறட்சி காரணமாக விலை குறையத்தொடங்கி இருப்பதால் கறவை மாடுகளின் விலையும் குறைந்து வருகிறது.

குண்டடம் மாட்டு சந்தையில் நேற்று 7 முதல் 10 லிட்டர் பால் கொடுக்கும் ஜெர்சி மாடு ரூ.40ஆயிரம் வரையே விலை போனது. அதே நேரத்தில் அடிமாட்டுக்கு போகும் கன்றுகளின் விலையில் பெரிய மாற்றமில்லை. 20 கிலோ உள்ள கன்றுகள் ரூ.3 ஆயிரம் வரை விலை போயின. நேற்று மட்டும் சந்தைக்கு சுமார் 2 ஆயிரம் மாடுகள் விற்பனைக்கு வந்தன. மாடுகள் மற்றும் கன்றுகளில் பெரும்பாலானவை விற்றுவிட்டன.

இதுபற்றி வியாபாரிகள் கூறுகையில், தற்போது கேரளாவில் ஓணம் பண்டிகை விமர்ரிசையாக கொண்டாடப்படுவதாலும், இறைச்சி தேவை அதிகம் இல்லாததாலும், கேரளா வியாபாரிகள் அதிகளவில் மாடுகளை வாங்காததால் விலை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக கூறினர்.

Newsletter

“பிரதமரின் உரை எனக்குப் புதிய தெம்பைக் கொடுத்து உள்ளது” – மருத்துவமனையில் இருந்து வானதி சீனிவாசன் நெகிழ்ச்சி

உடல்நலக்குறைவால் கடந்த சில நாட்களாகத் தேர்தல் களத்தில் இருந்து தற்காலிகமாக விலகி சிகிச்சை பெற்று வரும் வானதி சீனிவாசன்,...

விஷு பண்டிகைக்கு கோவையில் இருந்து 5 நாட்களில் 15 டன் காய்கறி,பழங்கள் ஷார்ஜாவுக்கு ஏற்றுமதி

மலையாள புத்தாண்டு விஷு பண்டிகை முன்னிட்டு கோவை விமான நிலையத்திலிருந்து கடந்த 5 நாட்களில் 15 டன் எடை கொண்ட காய்கறிகள் மற்...

கோவை பெரியநாயக்கன்பாளையத்தில்  கொடி அணிவகுப்பு..!

பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் எல்லை பாதுகாப்ப...

அதிமுகவிற்கு ஆதரவு தெரிவித்த கோவை மாவட்ட மலையாள அசோசியேஷன்..!

வரும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, கோவை மாவட்ட மலையாள அசோசியேஷன் நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணியை சந்தித...

சின்னியம்பாளையம் அருகே இளைஞரிடம் செல்போன் மற்றும் ரூ.2,000 பறிப்பு - மூவர் மீது வழக்கு

கோவை சின்னியம்பாளையம் ஆர்.ஜி.புதூர் அருகே மூன்று பேர் கொண்ட கும்பல் இளைஞரை திடீரென வழிமறித்து விலை உயர்ந்த செல்போன் மற்ற...

கோவை நேரு நகரில் 8 பவுன் தங்கச் செயின் பறிப்பு - பீளமேடு போலீசார் தீவிர விசாரணை

கோவை நேரு நகர் மேற்கு பேருந்து நிறுத்தம் அருகே பைக்கில் சென்ற பெண்ணிடமிருந்து மர்ம நபர் 8 பவுன் தங்கச் செயினை பறித்து தப...