பற்றி எரிந்த பனியன் ஏற்றுமதி நிறுவனம் - பல கோடி மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசம்

திருப்பூர் பல வஞ்சிபாளையம் பகுதியில் மூர்த்தி என்பவருக்கு சொந்தமான வாமன் பனியன் ஏற்றுமதி நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. அந்த நேரத்தில் ஊழியர்கள் அனைவரும் வெளியேறிய விட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.


திருப்பூர்: பனியன் ஏற்றுமதி நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில், பல கோடி ரூபாய் மதிப்பிலான பனியன் இயந்திரங்கள், ஏற்றுமதிக்கு தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த பனியன் ஆடைகள், நூல் உள்ளிட்ட மூலப் பொருட்கள் முற்றிலும் எரிந்து சேதமடைந்தன.

திருப்பூர் பல வஞ்சிபாளையம் பகுதியில் மூர்த்தி என்பவருக்கு சொந்தமான வாமன் பனியன் ஏற்றுமதி நிறுவனத்தில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் வேலை செய்து வருகின்றனர்.



இந்நிலையில், நேற்று மாலையில் தொழிலாளர்கள் பணி முடிந்து வெளியேறிய சிறிது நேரத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.



இதன் காரணமாக பனியன் நிறுவனத்திலிருந்து கரும்புகை அதிகளவில் வெளியேறியது.



இதனை தொடர்ந்து அருகிலிருந்தவர்கள் உடனடியாக காவல் மற்றும் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் அளித்தனர். உடனடியாக விரைந்து வந்த திருப்பூர் வடக்கு, தெற்கு மற்றும் பல்லடம் தீயணைப்பு நிலையங்களிலிருந்து வந்த தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டன.

பனியன் நிறுவனம் 3000 அடிக்கும் மேற்பட்ட சதுர அடியிலுள்ளதால் தீயணைப்பு வீரர்கள் தீயை போராடி அணைத்தனர். இந்த தீ விபத்தில் பல கோடி ரூபாய் மதிப்பிலான பனியன் இயந்திரங்கள், ஏற்றுமதிக்கு தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த பனியன் ஆடைகள், நூல் உள்ளிட்ட மூலப் பொருட்கள் முற்றிலும் எரிந்து சேதம்டைந்தன.

தீ விபத்திற்கான காரணம் குறித்து வீரபாண்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சம்பவ நடந்த இடத்தில் திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் நேரடியாக பார்வையிட்டு பணிகளை விரைவுபடுத்தினார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...