பராமரிப்பின்றி கிடக்கும் குடிநீர் மேல்நிலைத்தொட்டி - இடிந்து விழும் முன்பே சீரமைக்குமாறு மக்கள் கோரிக்கை

உடுமலையில் பராமரிப்பின்றி இடிந்து விழும் நிலையில் உள்ள குடிநீர் மேல்நிலைத்தொட்டியை உடனடியாக சரி செய்ய வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.



திருப்பூர்: குடிநீர் மேல்நிலைத்தொட்டியின் கீழ்பாகம், தூண்கள் உள்ளிட்டவற்றில் விரிசல் ஏற்பட்டு கான்கிரீட் உதிர்ந்து கீழே விழுந்து வருகிறது.



குடிநீர் தொட்டியை சுற்றிலும் கட்டப்பட்ட காம்பவுண்ட் சுவரும் சேதமடைந்து உள்ளதா மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சி ராமசாமி நகரில் 6 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் தொட்டி உள்ளது. இந்த தொட்டி முறையாக பராமரிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.



இதனால் தொட்டியின் கீழ்பாகம், தூண்கள் உள்ளிட்டவற்றில் விரிசல் ஏற்பட்டு கான்கிரீட் உதிர்ந்து கீழே விழுந்து வருகிறது. அத்துடன் குடிநீர் தொட்டியை சுற்றிலும் கட்டப்பட்ட காம்பவுண்ட் சுவரும் சேதமடைந்து உள்ளது.



அதுமட்டுமின்றி தொட்டி நிறைந்து வெளியேறும் தண்ணீர் வழிந்து செல்வதில்லை. மாறாக தொட்டியின் கீழ் புறத்தில் தேங்கி நிற்கிறது. இதனால் குடிநீர் தொட்டி படிப்படியாக வலுவிழந்து நாளடைவில் முற்றிலுமாக இடிந்து விழும் நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே குடிநீர் தொட்டியை பராமரிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...