பராமரிப்பின்றி கிடக்கும் குடிநீர் மேல்நிலைத்தொட்டி - இடிந்து விழும் முன்பே சீரமைக்குமாறு மக்கள் கோரிக்கை

உடுமலையில் பராமரிப்பின்றி இடிந்து விழும் நிலையில் உள்ள குடிநீர் மேல்நிலைத்தொட்டியை உடனடியாக சரி செய்ய வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.



திருப்பூர்: குடிநீர் மேல்நிலைத்தொட்டியின் கீழ்பாகம், தூண்கள் உள்ளிட்டவற்றில் விரிசல் ஏற்பட்டு கான்கிரீட் உதிர்ந்து கீழே விழுந்து வருகிறது.



குடிநீர் தொட்டியை சுற்றிலும் கட்டப்பட்ட காம்பவுண்ட் சுவரும் சேதமடைந்து உள்ளதா மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சி ராமசாமி நகரில் 6 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் தொட்டி உள்ளது. இந்த தொட்டி முறையாக பராமரிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.



இதனால் தொட்டியின் கீழ்பாகம், தூண்கள் உள்ளிட்டவற்றில் விரிசல் ஏற்பட்டு கான்கிரீட் உதிர்ந்து கீழே விழுந்து வருகிறது. அத்துடன் குடிநீர் தொட்டியை சுற்றிலும் கட்டப்பட்ட காம்பவுண்ட் சுவரும் சேதமடைந்து உள்ளது.



அதுமட்டுமின்றி தொட்டி நிறைந்து வெளியேறும் தண்ணீர் வழிந்து செல்வதில்லை. மாறாக தொட்டியின் கீழ் புறத்தில் தேங்கி நிற்கிறது. இதனால் குடிநீர் தொட்டி படிப்படியாக வலுவிழந்து நாளடைவில் முற்றிலுமாக இடிந்து விழும் நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே குடிநீர் தொட்டியை பராமரிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...