பர்லியாறு அருகே 20 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து - வாலிபர் பலியான சோகம்!

திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த நண்பர்கள் 4 பேர் காரில் ஊட்டிக்கு சுற்றுலா சென்றுவிட்டு ஊர் திரும்பிய போது, பர்லியார் மரப்பாலம் அருகே கார் நிலைதடுமாறி 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பிரவீன் குமார் (32) என்பவர் உயிரிழந்த நிலையில், படுகாயமடைந்த மூவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


கோவை: கோவை பர்லியார் அருகே கார் ஒன்று 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் கரடிவாவி மல்லே கவுண்டன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சாந்தாராம் (42). இவர் தனது நண்பர்களான அன்னூரை சேர்ந்த வேல்முருகன் (33), அமீனுல்லா (45), பிரவீன் குமார் (32) உள்ளிட்டோருடன் காரில் ஊட்டிக்கு சுற்றுலா சென்றுள்ளார்.

பின்னர் நேற்று இரவு அவர்கள் மீண்டும் காரில் ஊர் திரும்பி கொண்டு இருந்தனர். காரை சாந்தாராம் ஓட்டி வந்தார். பர்லியார் மரப்பாலம் அருகே வந்தபோது கார் நிலைதடுமாறி வலது புற தடுப்புச்சுவரில் மோதி சுமார் 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதனையடுத்து அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் காரில் பின்புறம் அமர்ந்திருந்த பிரவீன் குமார் என்பவர் தலைப்பகுதியில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.

மேலும், படுகாயமடைந்த சாந்தாராம், வேல்முருகன், அமீனுல்லா உள்ளிட்டோர் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

140க்கு மேல் இல்லை, எங்கள் கணக்குப்படி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி – கோவையில் செல்வப்பெருந்தகை

கோவை விமான நிலையத்தில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, கருத்துக்கணிப்புகள் மக்கள் மனநிலையை மாற்ற முடியாது...

கட்டாஞ்சிமலை: குட்டையில் காருடன் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

கட்டாஞ்சிமலையில் இருந்து தாயனூர் செல்லும் சாலையில் குட்டையில் காருடன் மூழ்கி 25 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து ப...

ரயில்வேயில் பணியிடங்கள் குறைப்பு: கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இந்திய ரயில்வே துறையில் பணியாளர் குறைப்பை கண்டித்து, கோவை ரயில் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பா...

கோவையில் இன்று மாலை காவல்துறை கொடி அணிவகுப்பு - போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, கோவை மாநகர காவல்துறை இன்று (02.05.2026) மாலை 4.00 மணி முதல் 5.30 ம...

SRIT-ன் கண்டுபிடிப்பு நடைமுறை தேசிய அளவிலான காபி டேபிள் புத்தகத்தில் இடம்பெற்றது

கோயம்புத்தூரில் உள்ள Sri Ramakrishna Institute of Technology-ன் கல்வி கண்டுபிடிப்பு நடைமுறை "The Higher Education Playbo...

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...