தடாகம் அருகே திமுக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி - நாஞ்சில் சம்பத் பங்கேற்பு!

தடாகம் பேருந்து நிறுத்தம் அருகே பெரியநாயக்கன் பாளையம் மேற்கு ஒன்றிய தி.மு.க சார்பில் முன்னாள் முதல்வர் கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் சிறப்பு பேச்சாளராக நாஞ்சில் சம்பத் கலந்து கொண்டு, பெண்களுக்கு சேலைகள் மற்றும் விளையாட்டு உபகரணங்களை வழங்கினார்.



கோவை: தடாகம் அருகே பெரியநாயக்கன்பாளையம் திமுக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் சேலை மற்றும் விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டன.



கோவை தடாகம் பேருந்து நிறுத்தம் அருகே பெரியநாயக்கன்பாளையம் மேற்கு ஒன்றிய தி.மு.க சார்பில் முன்னாள் முதல்வர் கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

இந்த நிகழ்வில் ஒன்றிய செயலாளர் சி.எம்.கிருஷ்ணகுமார் தலைமை தாங்கி பேசினார். கிளை செயலாளர் சபரீஸ்வரன் அனைவரையும் வரவேற்றார். நிர்வாகிகள் ஆனைகட்டி மதன், எம்.ஆர்.டி.செல்வராஜ், கலைவாணி முத்துக்குமார், சிவகுமார், கே.சி.கே.சம்பத்குமார், சோமையம்பாளையம் ஆனந்தக்குமார், நஞ்சுண்டம்புரம் துணைத்தலைவர் திருநாவுக்கரசு, கதிர்வேல் உள்ளிட்டவர்கள் முன்னிலை வகித்தனர்.



சிறப்பு பேச்சாளர் நாஞ்சில் சம்பத், மாவட்ட செயலாளர் தொ.அ.ரவி ஆகியோர் சிறப்புரையாற்றினர். தொடர்ந்து கால்பந்து வீரர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள், சிருடைகள் மற்றும் பெண்களுக்கு இலவச சேலைகள் வழங்கினர்.



இந்த விழாவில் தலைமை செயற்குழு உறுப்பினர் டி.பி.சுப்ரமணியன், மாவட்ட துணை செயலாளர் அசோக்பாபு ஆறுக்குட்டி, ஒன்றிய செயலாளர் கார்த்திக், ஐ.டி.மாவட்ட ஒருங்கிணைபாளர் ஹரீஸ், நிர்வாகிகள் டி.டி.எஸ்.மூர்த்தி, டி.வி.செல்வராஜ், டி.டி.கே.கதிர்வேல், வீரபாண்டி ஊராட்சித்தலைவர் பழனிச்சாமி, மாணிக்கம் மயில்சாமி, கனகராஜ், பி.டி.கோபால்சாமி, டி.கே.டி.சிவகுமார், டி.எஸ்.ஆர்.அருண்பிரசாத், தடாகம் கிளை செயலாளர்கள் பரமேஸ்வரன், கந்தசாமி, மல்லிகார்ஜூனன், கன்னிமுத்து, சடகுட்டி, குமார் வேலுமணி, ஒன்றிய, பகுதி மற்றும் பேரூர் கழக செயலாளர்கள், பன்னிமடை, சோமையம்பாளையம், 24.வீரபாண்டி, நஞ்சுண்டாபுரம் கிளை செயலாளர்கள், இளைஞரணி நிர்வாகிகள், கட்சி முன்னோடிகள், மகளிர் அணியினர் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்துக்கொண்டனர். இறுதியில் இளைஞர் அணியை சேர்ந்த ஜெகன் பிரசாத் நன்றி கூறினார்.

Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...