மால்கம் எலிசபத் ஆதிசேஸ்ய்யா நிறுவன குழு 1994-ம் ஆண்டு சென்னையில் நிறுவப்பட்டது. இதன் முக்கிய நோக்கம் பொருளியல் நன்கு கற்பிப்போரையும், ஆராய்ச்சிகளை மேற்கொள்வோரையும் ஊக்கப்படுத்துவதாகும். அதன் அடிப்படையில் வருடந்தோறும் பெருளியலில் சிறந்த பேராசிரியருக்கான விருது வழங்கப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டும் இன்று பொருளியலில் சிறந்த பேராசிரியருக்கான விருது தொடர்பான நேர்முக தேர்வு நடத்தப்பட்டது. இதில் 17 பேர் தமிழ்நாடு முழுவதும் உள்ள கல்லூரி மற்றும் பல்கலைக்கழகத்தில் இருந்து பங்கேற்றனர்.
அதில் பல்கலைக் கழகங்களுக்கும், கல்லூரிகளுக்கு தனித்தனியாக ஒரு விருது அளிக்கப்பட்டது. அதற்கான விருதளிக்கும் விழா இன்று அவினாசிலிங்கம் பல்கலைக் கழக வளாகத்தில் நடைபெற்றது.
அதில் அவினாசிலிங்கம் பல்கலைக்கழகம் பொருளியியல் துறை இணை பேராசிரியர் காந்திமதிக்கு பல்கலைக் கழகங்களுக்கான விருது வழங்கப்பட்டது. இதனை மால்கம் ஆதிசேஸ்ய்யா குழு உறுப்பினர் மற்றும் பொருளியியல் அளவியல் துறையின் இணை பேராசிரியர் ஸ்ரீனிவாசன் இவ்விருத்திற்கான சான்றிதழையும் முப்பது ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணத்தையும் வழங்கி சிறப்பித்தார்.

இவ்விழாவில், பொருளியியல் துறை தலைவர் கீதா வரவேற்புரை ஆற்றினார். பல்கலைக்கழக வேந்தர் பி.ஆர்.கிருஷ்ணகுமார் தலைமையுரை ஆற்றினார்.
இதில், பல்கலைக்கழக பதிவாளர் கெளசல்யா, முன்னாள் கலையில் புல முதன்மையர் ராமதிலகம், கலைப்புல முதன்மையர் அம்பிகாதேவி, ஆசிரியர்கள் மற்றும் கல்லூரி மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.