பொருளியலில் சிறந்த பேராசிரியருக்கான விருது அவினாசிலிங்கம் பல்கலை., பேராசிரியர் காந்திமதிக்கு வழங்கப்பட்டது



மால்கம் எலிசபத் ஆதிசேஸ்ய்யா நிறுவன குழு 1994-ம் ஆண்டு சென்னையில் நிறுவப்பட்டது. இதன் முக்கிய நோக்கம் பொருளியல் நன்கு கற்பிப்போரையும், ஆராய்ச்சிகளை மேற்கொள்வோரையும் ஊக்கப்படுத்துவதாகும். அதன் அடிப்படையில் வருடந்தோறும் பெருளியலில் சிறந்த பேராசிரியருக்கான விருது வழங்கப்பட்டு வருகிறது.



இந்த ஆண்டும் இன்று பொருளியலில் சிறந்த பேராசிரியருக்கான விருது தொடர்பான நேர்முக தேர்வு நடத்தப்பட்டது. இதில் 17 பேர் தமிழ்நாடு முழுவதும் உள்ள கல்லூரி மற்றும் பல்கலைக்கழகத்தில் இருந்து பங்கேற்றனர்.

அதில் பல்கலைக் கழகங்களுக்கும், கல்லூரிகளுக்கு தனித்தனியாக ஒரு விருது அளிக்கப்பட்டது. அதற்கான விருதளிக்கும் விழா இன்று அவினாசிலிங்கம் பல்கலைக் கழக வளாகத்தில் நடைபெற்றது.

அதில் அவினாசிலிங்கம் பல்கலைக்கழகம் பொருளியியல் துறை இணை பேராசிரியர் காந்திமதிக்கு பல்கலைக் கழகங்களுக்கான விருது வழங்கப்பட்டது. இதனை மால்கம் ஆதிசேஸ்ய்யா குழு உறுப்பினர் மற்றும் பொருளியியல் அளவியல் துறையின் இணை பேராசிரியர் ஸ்ரீனிவாசன் இவ்விருத்திற்கான சான்றிதழையும் முப்பது ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணத்தையும் வழங்கி சிறப்பித்தார்.



இவ்விழாவில், பொருளியியல் துறை தலைவர் கீதா வரவேற்புரை ஆற்றினார். பல்கலைக்கழக வேந்தர் பி.ஆர்.கிருஷ்ணகுமார் தலைமையுரை ஆற்றினார். 

இதில், பல்கலைக்கழக பதிவாளர் கெளசல்யா, முன்னாள் கலையில் புல முதன்மையர் ராமதிலகம், கலைப்புல முதன்மையர் அம்பிகாதேவி, ஆசிரியர்கள் மற்றும் கல்லூரி மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...