உடுமலையில் ஓணம் பண்டிகை - உற்சாகமாக கொண்டாடிய கேரள மக்கள்!

ஓணம் பண்டிகையையொட்டி உடுமலையில் வசிக்கும் கேரள மக்கள் தங்கள் வீடுகளில் பூக்களால் ஆன அத்தப்பூ கோலம் வரைந்தும், தீபம் ஏற்றியும், 21 வகையான உணவுகள் தயாரித்து இலைகளில் பரிமாறி மகாபலி சக்கரவர்த்திக்கு படைத்து வழிபட்டு உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.



திருப்பூர்: உடுமலையில் வசிக்கும் கேரள மக்கள் ஓணம் பண்டிகையையொட்டி, தங்கள் வீடுகளில் அத்த பூக்கோலமிட்டு உற்சாகமாக கொண்டாடினர்.



திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சி பகுதியில் ராமசாமி நகர், செந்தூர் கார்டன், கிரீன் பார்க் லே அவுட் உட்படபல்வேறு பகுதிகளில் வசிக்கும்மலையாள மக்கள் ஓணம்பண்டிகையை பாரம்பரியமான முறையில்உற்சாககொண்டாடினர்.



இதனையொட்டி மக்கள் தங்கள் வீடுகளில் பூக்களால் ஆன அத்தப்பூ கோலம் வரைந்தும், தீபம் ஏற்றியும், 21 வகையான உணவுகள் தயாரித்து இலைகளில் பரிமாறி மகாபலி சக்கரவர்த்திக்கு படைத்து வழிபட்டனர். உறவினர்கள், நண்பர்களுக்குவாழ்த்துக்களை பரிமாறியும் பாரம்பரியமான விளையாட்டுகளுடன் உற்சாகமாக கொண்டாடினர்.

இதுகுறித்து மலையாள மக்கள் கூறியதாவது,

ஓணம் பண்டிகை வருடம் தோறும்பத்து நாள் கொண்டாடும் நிலையில், இறுதி நாளில் ஓணத்தைமிக சிறப்பாக கொண்டாடி வருகின்றோம். மேலும் மாவலி மன்னனை வரவேற்கும் விதமாக அத்தப்பூ கோலம் இட்டும், களிமண்ணால் மாவலி உருவத்தை வீட்டின் முன்பு வழிபாடு செய்து வருகிறோம்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...