நொய்யல் திருவிழாவில் காவடி ஆட்டம் ஆடிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை!

கோவை பேரூரில் நடைபெற்று வரும் நொய்யல் திருவிழாவில் கலந்து கொண்ட பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளை கண்டு களித்த நிலையில் காவடி ஆட்ட குழுவினருடன் இணைந்து காவடி ஆட்டம் ஆடி உற்சாகப்படுத்தினார்.



கோவை: நொய்யல் திருவிழாவில் கலந்து கொண்ட பாஜக தலைவர் அண்ணாமலை உற்சாகத்துடன் காவடி ஆட்டம் ஆடினார்.

கோவை பேரூர் ஆதீன மடத்தில், பாரதீய சன்யாசிகள் சங்கம் சார்பில் நொய்யல் திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சி பேரூர் ஆதீனம் மருதாச்சல அடிகளார் தலைமையில் நடைபெற்று வருகிறது.

நொய்யல் ஆற்றை காப்பதை மையமாக கொண்டு நடைபெறும் இந்நிகழ்விற்கு தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், உட்பட பலர் கலந்து கொண்டனர்.



அதன் தொடர்ச்சியாக இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார்.

அப்போது அவர், அங்கு நடைபெறும் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளை கண்டு களித்தார். முன்னதாக அவர் காவடி ஆட்ட கலைக் குழுவினருடன் இணைந்து காவடி ஆட்டம் ஆடினார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...