கடனை திருப்பி செலுத்தாததால் தாராபுரத்தில் அரசு பள்ளி ஜப்தி… - மாணவர்கள், பெற்றோர்கள் அதிர்ச்சி..!!

தாராபுரத்தில் கடனை திருப்பி செலுத்தாததால், அரசு உதவிப்பெறும் பள்ளி நீதிமன்ற ஆணைப்படி ஜப்தி செய்யப்பட்டது. இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் அங்கு பயிலும் மாணவர்களும், அவர்களின் பெற்றோர்களும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.



திருப்பூர்: பள்ளியின் இடத்தை அடமானம் வைத்து அரசு உதவிப்பெறும் பள்ளியின் நிர்வாகத்தினர் தனியார் நிதி நிறுவனத்தினரிடம் கடன் வாங்கியுள்ளனர். அந்த கடன் நீண்ட நாட்களாகியும் அவர்கள் அடைக்காத்தால், நீதிமன்ற ஆணைப்படி, பள்ளி ஜப்தி செய்யப்பட்டுள்ளது.



திருப்பூர் மாவட்டம் தாராபுரம் போலீஸ் நிலையம் அருகே அரசு உதவி பெறும் ஆரம்பப்பள்ளி உள்ளது. இங்கு 20-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளி நிர்வாகத்தினர் தனியார் நிதி நிறுவனத்தில் கடன் வாங்கினர்.இதற்காக பள்ளியின் இடத்தை ஈடாக கொடுத்து இருந்தனர்.

இந்தநிலையில் நீண்ட நாட்களாகியும் கடனை திருப்பி செலுத்தாததால் தனியார் நிதி நிறுவனத்தினர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். கடந்த 10 வருடங்களாக இந்த வழக்கு நடைபெற்று வந்தது. கடனை திருப்பி செலுத்தக்கோரி ஐகோர்ட்டு பலமுறை உத்தரவிட்டும் அதனை செலுத்தாததால் பள்ளி இடத்தை ஜப்தி செய்ய நீதிபதி உத்தரவிட்டார்.



இதையடுத்து கோர்ட்டு அமீனா தாராபுரம் வந்து பள்ளியை ஜப்தி செய்வதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டார். இதற்கு பள்ளி நிர்வாகத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து தாராபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலைமையிலான போலீசார் பாதுகாப்புடன் பள்ளி இடம் ஜப்தி செய்யப்பட்டது.



இதனால் அங்கு படித்து வந்த மாணவர்கள் அதிர்ச்சியடைந்தனர். அவர்களின் கல்வி கேள்விக்குறியாகியுள்ளது. அவர்களை அருகில் உள்ள பள்ளிகளில் கல்வி பயில்வதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என மாணவர்களின் பெற்றோர் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடனை திருப்பி செலுத்தாததால் அரசு உதவி பெறும் பள்ளி ஜப்தி செய்யப்பட்ட சம்பவம் தாராபுரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

“Unable to Breathe” – Chettipalayam Residents Petition Pollution Control Board Over Garbage Burning

Residents of Chettipalayam in Coimbatore have petitioned the Tamil Nadu Pollution Control Board, alleging severe health...

“குப்பை எரிப்பால் மூச்சு விடவே முடியவில்லை” – செட்டிபாளையம் பொதுமக்கள் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு மனு..!

கோவை செட்டிபாளையம் பகுதியில் காலி மனையில் குப்பைகள் தீ வைத்து எரிக்கப்படுவதால் எழும் நச்சுப் புகையால் கடும் அவதிப்படுவதா...

சிங்கப்பூர் நிறுவனத்துடன் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சிங்கப்பூர் நிறுவனமான iGenius AI Private Limited...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு; மழை விளைவுகள் சீரமைப்பு பணிகள் ஆய்வு

கோயம்புத்தூர் சிங்காநல்லூர் தொகுதி 27-வது வார்டு பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டது. மழையினால் விழுந்த...

முதல்வர் விஜய் - எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம் சந்திப்பு

அதிமுக முன்னாள் அமைச்சர்களான எஸ்.பி. வேலுமணி மற்றும் சி.வி. சண்முகத்தை முதல்வர் விஜய் நேரில் சந்தித்தது தமிழக அரசியல் வட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் சர்வதேச செவிலியர் தினம் 2026 சிறப்பாக கொண்டாடப்பட்டது

கோயம்புத்தூரில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் மே 12, 2026 அன்று சர்வதேச செவிலியர் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது...