சீர்மிகு நகரத்திட்டத்தில்‌ ரூ.62.06 கோடி மதிப்பீட்டில்‌ பெரியகுளம்‌ புனரமைக்கப்படும்‌ பணி - மாநகராட்சி ஆணையாளர்‌ ஆய்வு

சீர்மிகு நகரத்திட்டத்தில்‌ ரூ.62.06 கோடி மதிப்பீட்டில்‌ பெரியகுளம்‌ புனரமைக்கப்படும்‌ பணிகளில்‌ ஒரு பகுதியாக அனுபவ மையம்‌ அமைக்கப்பட்டுவரும்‌ பணிகளை மாநகராட்சி ஆணையாளர்‌ மு.பிரதாப்‌ நேரில்‌ சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்‌.


கோவை: கோயம்புத்தூர்‌ மாநகராட்சி பகுதிகளில்‌ உள்ள குளங்கள்‌ சீர்மிகு நகர திட்டத்தின்‌ கீழ்‌ புனரமைத்து அழகுபடுத்தப்பட்டு வருகிறது என்று மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் தெரிவித்தார்.



சீர்மிகு நகரத்திட்டத்தில்‌ ரூ.62.06 கோடி மதிப்பீட்டில்‌ பெரியகுளம்‌ புனரமைக்கப்படும்‌ பணிகளில்‌ ஒரு பகுதியாக அனுபவ மையம்‌ அமைக்கப்பட்டுவரும்‌ பணிகளை மாநகராட்சி ஆணையாளர்‌ மு.பிரதாப்‌ நேரில்‌ சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்‌.



பின்னர்‌ அவர் தெரிவித்ததாவது, கோயம்புத்தூர்‌ மாநகராட்சி பகுதிகளில்‌ உள்ள குளங்கள்‌ சீர்மிகு நகர திட்டத்தின்‌ கீழ்‌ புனரமைத்து அழகுபடுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில்‌ உக்கடம்‌ பெரியகுளக்கரையில்‌ அனுபவ மையம்‌ அமைக்கப்பட்டு வருகிறது.

இந்த மையத்தில்‌ கோயம்புத்தூர்‌ மாநகராட்சி பகுதிகளில்‌ சீர்மிகு நகர திட்டத்தின்‌ கீழ்‌ செய்யப்பட்டு உள்ள பணிகள்‌ மற்றும்‌ கோயம்புத்தூர்‌ மாவட்டத்தில்‌ உள்ள சுற்றுலா மையங்கள்‌ அனைத்தும்‌ 3டி வடிவத்தில்‌ திரையிட்டு காட்டப்படும்‌.



இது தவிர குழந்தைகளை கவர 3டி விளையாட்டு அம்சங்களும்‌ உள்ளன. இதற்கான பணிகள்‌ தீவிரமாக நடந்து வருகிறது. ஏற்கனவே இந்த குளக்கரையில்‌ பொதுமக்களை கவர்ந்து இழுக்க பல்வேறு வசதிகள்‌ செய்யப்பட்டு உள்ளது. இந்த அனுபவ மையம்‌ பொது மக்களுக்கு மேலும்‌ ஒரு சிறப்பு அம்சமாக இருக்கும்‌. இதற்கான பணிகள்‌ அனைத்தும்‌ 90 சதவீதம்‌ முடிவடைந்து விட்டது. இப்பணிகள்‌ விரைவில்‌ முடிக்கப்பட்டு பொதுமக்கள்‌ பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும்‌ என மாநகராட்சி ஆணையாளா்‌ மு.பிரதாப்‌ இ.ஆ.ப., தெரிவித்துள்ளார்‌.

இந்த ஆய்வின்போது சீர்மிகு நகர திட்ட பொது மேலாளர்‌ பாஸ்கரன்‌, உதவி பொறியாளர்‌ சரவணக்குமார்‌ ஆகியோர்‌ உடனிருந்தனர்.

Newsletter

கோவையில் ரயில்கள் மீது கல்வீச்சு சம்பவங்கள்: ஆர்.பி.எப் கண்காணிக்க நடவடிக்கை.

கோவையில் ரயில்கள் மீது தொடர்ந்து நடைபெற்று வரும் கல்வீச்சு சம்பவங்களை தொடர்ந்து, ரயில்வே பாதுகாப்புப் படையினர் (RPF) தண்...

கோவையில் 6 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை : வேன் டிரைவர் போக்ஸோவில் கைது..!

கோவையில் 6 வயது சிறுமிக்கு பள்ளி வேன் டிரைவர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் வே...

மேட்டுப்பாளையம் - நெல்லித்துறை சாலையில் தாறுமாறாக நிறுத்தப்படும் கனரக வாகனங்கள் : பக்தர்கள், வாகன ஓட்டிகள் அவதி..!

மேட்டுப்பாளையம் - நெல்லித்துறை சாலையில் உருளைக்கிழங்கு மற்றும் பூண்டு மண்டிகளுக்கு வரும் கனரக லாரிகள் தாறுமாறாக நிறுத்தப...

காரமடை அருகே கிணற்றில் தவறி விழுந்த காட்டுப்பன்றிகள் - பத்திரமாக மீட்ட தீயணைப்புத்துறை..!

காரமடை அருகே 60 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்த தாய் மற்றும் குட்டி காட்டுப்பன்றிகளை, தீயணைப்புத்துறையினர் மற்றும் வன...

Flights Temporarily Diverted to Kochi After Compound Wall Collapse Near Coimbatore Airport

Following heavy rain and strong winds in Coimbatore today evening, a section of the compound wall near Coimbatore Intern...

கனமழை எதிரொலி: கோவை விமான நிலைய சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததால் விமானங்கள் கொச்சிக்கு திருப்பி விடப்பட்டது

கோவையில் பெய்த கனமழை மற்றும் பலத்த காற்றால் சின்னியம்பாளையம் அருகே கோவை சர்வதேச விமான நிலைய சுற்றுச்சுவர் இடிந்து விழுந்...