கோவையில் பணியில் சிறப்பாக செயல்பட்ட காவல்துறையினர்..! - பாராட்டி சான்றிதழ் வழங்கிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

கோவை மாவட்டத்தில் பணியில் சிறந்து விளங்கிய பெருமாள், சுரேஷ், ரஞ்சித்குமார் ஆகிய காவலர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் பாரட்டி வாழ்த்து தெரிவித்தார்.


கோவை: ரயிலில் குதித்து தற்கொலைக்கு முயன்ற ஒரு நபரை, அவரிடம் பேசி தற்கொலை எண்ணத்தை மாற்றி உயிரை காப்பாற்றி, குடும்பத்தினரிடம் ஒப்படைத்த கோவில்பாளையம் தனிப்பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் பெருமாளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் பாரட்டி வாழ்த்து தெரிவித்தார்.

கோவை மாவட்டம் கோவில்பாளையம் பகுதியில் ரயிலில் குதித்து தற்கொலைக்கு முயன்ற ஒரு நபரை, அவரிடம் பேசி தற்கொலை எண்ணத்தை மாற்றி உயிரை காப்பாற்றி, குடும்பத்தினரிடம் கோவில்பாளையம் தனிப்பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் பெருமாள் ஒப்படைத்தார்.

இதேபோல், கோவில்பாளையம் பகுதியில் சட்டத்திற்கு விரோதமாக 600 கிலோ ரேஷன் அரிசி கடத்திய நபர்களை காவலர் சுரேஷ் அதிரடியாக களத்தில் இறங்கி பிடித்தார்.

பீளமேடு அருகே பொதுமக்களை மிரட்டும் வகையில் கத்தி வைத்துக் கொண்டிருந்த நபரை பிடித்து அதிரடிப்படையைச் சேர்ந்த காவலர் ரஞ்சித் குமார் காவல்நிலையத்தில் ஒப்படைத்தார்.

இந்த மூன்று பேரையும், இன்று (30.08.2023) மாவட்ட காவல் அலுவலகத்திற்கு வரவழைக்கப்பட்டனர்.



மூன்று காவலர்களின் இந்த நற்செயலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் பாராட்டி, சான்றிதழ் வழங்கி வாழ்த்துக்கள் தெரிவித்தார்.

Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...