சின்னதடாகம் அருகே செங்கல் சூளையில் இருந்து பழைய இரும்புகளை திருடிய நபர் கைது!

சின்னத்தடாகம் அருகே செங்கல் சூளையில் பழைய இரும்புகளை திருடிய அஜீஸ் என்பவரை போலீசார் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்த நிலையில், அவரிடம் இருந்து 47 கிலோ பழைய இரும்பு மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.



கோவை: சின்னத்தடாகம் அருகே செங்கல் சூளையில் பழைய இரும்புகளை திருடிய நபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கோவை சின்னத்தடாகம் பகுதியில் சுமார் 300க்கும் மேற்பட்ட செங்கல் சூகள் உள்ளன. சமூக நல ஆர்வலர்கள் தொடர்ந்த வழக்கில் நீதிமன்ற பிரப்பித்த உத்திரவு காரணமாக கடந்த 4 வருடங்களாக செங்கல் சூளைகள் செயல்படாமல் உள்ளன.

இந்த நிலையில் சின்னத்தடாகம் அருகில் உள்ள வீரபாண்டிபுதூர் பகுதியில் உள்ள MVN சேம்பர் என்ற செங்கல் சூளையில், நேற்று இரவு புகுந்த மர்ம நபர், அங்கு செயல்படாமல் இருந்த இயந்திரத்தில் இருந்து பழைய இரும்புகளை திருடிக் கொண்டு சென்றுள்ளார்.

அப்போது அந்த பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த தடாகம் போலீசார் சந்தேகத்தின் பேரில் அந்த வழியாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்துள்ளனர்.

அப்போது அந்த நபர் அதே பகுதியைச் சேர்ந்த அஜீஸ் என்பதும் இவர் அங்கிருந்த செங்கல் சூளையில் இருந்து பழைய இரும்புகளை திருடி வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.



அவரிடம் இருந்து 47 கிலோ பழைய இரும்பு மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்துள்ளனர்.

Newsletter

கோவை மாநகராட்சி வார்டு 22 திமுக கவுன்சிலர் கட்சியில் இருந்து விலகல்

திமுகவில் ஜனநாயகத்திற்கும் உழைப்பிற்கும் அங்கீகாரம் இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கோவை மாநகராட்சி 22-வது...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...