துடியலூர் அருகே அதுல்யா சீனியர் கேர் சார்பில் மூத்த குடிமக்களுக்கான ப்ரீமியர் குடியிருப்பு திறப்பு!

துடியலூர் அருகே அதுல்யா சீனியர் கேர் சார்பில் மூத்த குடிமக்களுக்கான ப்ரீமியர் குடியிருப்பை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் மற்றும் மாநகராட்சி ஆணையர் பிரதாப் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தனர்.



கோவை: துடியலூர் அருகே அதுல்யா சீனியர் கேர் சார்பில் மூத்த குடிமக்களுக்கான ப்ரீமியர் குடியிருப்பு இன்று திறக்கப்பட்டது.

கோவை துடியலூர் அருகே அதுல்யா சீனியர் கேர் சார்பில் மூத்த குடிமக்களுக்கான ப்ரீமியர் குடியிருப்பு திறக்கப்பட்டது.



இதனை கோயம்புத்தூர் மாநகர காவல்துறை ஆணையர் வி.பாலகிருஷ்ணன் மற்றும் கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் பிரதாப் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி குத்து விளக்கு ஏற்றி வைத்து திறந்து வைத்தனர்.



சுமார் 70 ஆயிரம் சதுர அடியில் அமைந்துள்ள இந்த வளாகத்தில் 100 படுக்கை வசதிகளுடன் கூடிய தொகுப்பு வீடுகள் உள்ளன. நாம் சொந்த வீட்டில் இருப்பது போன்ற உணர்வையும், சூழ்நிலையும் இங்கு ஏற்படுகின்றன. மேலும் மருத்துவர் மற்றும் இதர பணியாளர்கள் 24 மணி நேரமும் உள்ளனர்.



இதனால் முதியோர்களுக்கு 24 மணி நேரமும் மருத்துவ பராமரிப்பும், தனிப்பட்ட கவனிப்பும் கிடைகிறது. மருத்துவ ஆதரவு, நலவாழ்வு செயல்திட்டங்கள், பொழுதுபோக்கு நடவடிக்கைகள், விளையாட்டுகள், நூலகம், உடல்நலத்தைப் பேணுவதற்காக முதியோர்களுக்காகவே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட உணவுமுறை திட்டங்களுடன் அமைக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து அதுல்யா சீனியர் கேர் -ன் நிறுவனர் மற்றும் தலைமை செயல் அலுவலர் ஜி. ஸ்ரீனிவாசன் கூறியதாவது, மூத்த குடிமக்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் மாறிவரும் விருப்பங்களை பூர்த்தி செய்வதற்காக இம்மாதிரி திட்டம் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது என்று தெரிவித்தார்.

அதுல்யா சீனியர் கேர் – ன் நிறுவனரும், நிர்வாக இயக்குனருமான டாக்டர். ஆர். கார்த்திக் நாராயண் கூறியதாவது, இந்த வளாகத்தில் குடியிருக்கும் மூத்த குடிமக்கள் மிகவும் மகிழ்ச்சியோடும், மனநிறைவோடும் வாழ்க்கையை நடத்த சிறாப்பான சூழலை நாங்கள் வழங்குகிறோம் என்று தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியின் போது, கோயமுத்தூரில் இருந்து பல முக்கியஸ்தர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள்" குறித்த செய்முறைப் பயிற்சி

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மே 19-22, 2026 வரை தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள் குறித்த ச...

கோவை வேலைவாய்ப்பு பதிவுக்கு கட்டணம் இல்லை; போலி விளம்பரங்களை நம்ப வேண்டாம் - ஆட்சியர் எச்சரிக்கை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தின் அனைத்து சேவைகளும் இலவசம் என்றும், WhatsApp, Facebook, YouTube, Instagram போன்ற தளங்கள...

கோவை ஆனைகட்டியில் பழங்குடியினருக்கான ITI சேர்க்கை: ஜூன் 3 வரை விண்ணப்பிக்கலாம்- கோவை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோவை ஆனைகட்டியில் அமைந்துள்ள பழங்குடியினருக்கான அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026-27 கல்வியாண்டுக்கான சேர்க்கைக்கு ஜூன...