கோவை மாநகராட்சி, வடக்கு மண்டலம், 42-வது வார்டுக்குட்பட்ட உடையாம்பாளையம் பகுதியில் மாநகராட்சி துப்புரவுப் பணியாளர்கள் சுத்தம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருவதை மாநகராட்சி ஆணையர் மற்றும் அலுவலர் இன்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதனைத்தொடர்ந்து, அப்பகுதியில் வசிக்கும் வீடுகளுக்குச் செல்லும் துப்புரவு பணியாளர்கள் மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை பிரித்தெடுக்கும் பணியில் ஈடுபட்டு வருவதையும், கொசு ஒழிப்பு பணியாளர்கள் வீடுவீடாகச் சென்று தண்ணீர் தொட்டிகளில் அபேட் மருந்தினை ஊற்றுவதையும் ஆய்வு செய்தார்.

பின், அந்த வார்டுக்குட்பட்ட திருமலை நகர் பகுதிக்குச் சென்ற மாநகராட்சி ஆணையர் அங்கு செயல்பட்டு வரும் ஒரு கடையில் 50 மைக்ரான் குறைவாக உள்ள பாலீத்தீன் பைகளை பறிமுதல் செய்து, கடை உரிமையாளரிடம் பாலித்தீன் பைகளின் பயன்பாட்டை தவிர்த்து துணிகளால் ஆன பைகள், அல்லது சுற்றுச் சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத பைகளை உபயோகிக்குமாறு அறிவுரை வழங்கினார்.

இதைத்தொடர்ந்து, அப்பகுதியில் உள்ள மாநகராட்சிப் பூங்காவையும், உடையாம்பாளையத்தில் உள்ள நீர்த்தேக்கத்தொட்டி மற்றும் திருமலை நகரில் உள்ள உள்விளையாட்டரங்கம் சீரமைப்பு பணிகளை அய்வு செய்தார்.

இந்த அய்வுகளின் போது மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் உடன், நகர்நல அலுவலர் கே.சந்தோஷ்குமார், வடக்கு மண்டல உதவி ஆணையர் சரவணன், உதவி நகரமைப்பு அலுவலர் ஜெயலட்சுமி மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் பங்கேற்றனர்.

இதனைத்தொடர்ந்து, அப்பகுதியில் வசிக்கும் வீடுகளுக்குச் செல்லும் துப்புரவு பணியாளர்கள் மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை பிரித்தெடுக்கும் பணியில் ஈடுபட்டு வருவதையும், கொசு ஒழிப்பு பணியாளர்கள் வீடுவீடாகச் சென்று தண்ணீர் தொட்டிகளில் அபேட் மருந்தினை ஊற்றுவதையும் ஆய்வு செய்தார்.

பின், அந்த வார்டுக்குட்பட்ட திருமலை நகர் பகுதிக்குச் சென்ற மாநகராட்சி ஆணையர் அங்கு செயல்பட்டு வரும் ஒரு கடையில் 50 மைக்ரான் குறைவாக உள்ள பாலீத்தீன் பைகளை பறிமுதல் செய்து, கடை உரிமையாளரிடம் பாலித்தீன் பைகளின் பயன்பாட்டை தவிர்த்து துணிகளால் ஆன பைகள், அல்லது சுற்றுச் சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத பைகளை உபயோகிக்குமாறு அறிவுரை வழங்கினார்.

இதைத்தொடர்ந்து, அப்பகுதியில் உள்ள மாநகராட்சிப் பூங்காவையும், உடையாம்பாளையத்தில் உள்ள நீர்த்தேக்கத்தொட்டி மற்றும் திருமலை நகரில் உள்ள உள்விளையாட்டரங்கம் சீரமைப்பு பணிகளை அய்வு செய்தார்.

இந்த அய்வுகளின் போது மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் உடன், நகர்நல அலுவலர் கே.சந்தோஷ்குமார், வடக்கு மண்டல உதவி ஆணையர் சரவணன், உதவி நகரமைப்பு அலுவலர் ஜெயலட்சுமி மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் பங்கேற்றனர்.