கல்வி நிரம்பி வழிகிறதா என்று பார்க்கிறது திராவிட மாடல்! கழிவறை நிரம்பி வழிகிறதா என்று பார்க்கிறது ஆரிய மாடல்! கோவையில் திமுகவினர் போஸ்டர்

கோவை மாநகரில் திமுக சார்பில் பல்வேறு பகுதிகளில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. அதில் "கல்வி நிரம்பி வழிகிறதா என்று பார்க்கிறது திராவிட மாடல்! கழிவறை நிரம்பி வழிகிறதா என்று பார்க்கிறது ஆரிய மாடல்" என்ற வாசகங்களுடன் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.


கோவை: காலை சிற்றுண்டி திட்டத்தை கொச்சைப்படுத்தும் வகையில் தினமலர் நாளிதழில் நேற்று செய்தி வெளியிடப்பட்டது. இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், திமுகவினர் போஸ்டர் மூலம் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

தமிழக அரசின் காலை சிற்றுண்டி திட்டம் அனைவரது மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், நேற்றைய தினம் தினமலர்(திருச்சிப்பதிப்பு) நாளிதழில் காலை சிற்றுண்டி திட்டத்தை கொச்சைப்படுத்தும் வகையில் செய்தி தலைப்புடன் செய்தி வெளியாகியிருந்தது.

அதற்கு பல்வேறு தரப்பினர் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். நேற்று தமிழகத்தில் பல்வேறு பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டமும், தினமலர் நாளிதழ் எரிப்பு போராட்டங்களும் நடைபெற்றன.

அரசு பள்ளி மாணவர்களும் அவர்களின் பெற்றோர்களும் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் கோவை மாநகரில் திமுக சார்பில் பல்வேறு பகுதிகளில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. அதில் "கல்வி நிரம்பி வழிகிறதா என்று பார்க்கிறது திராவிட மாடல்! கழிவறை நிரம்பி வழிகிறதா என்று பார்க்கிறது ஆரிய மாடல்" என்ற வாசகங்களுடன் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...