அரியலூர் அனிதா நினைவு நாள்: கோவையில் திமுகவினர் அஞ்சலி... திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை..

நீட் தேர்வு தோல்வியால் கடந்த 2017ல் தற்கொலை செய்துகொண்ட அரியலூரைச் சேர்ந்த மாணவி அனிதாவின் நினைவு நாளை ஒட்டி கோவை வீரபாண்டி பிரிவு பகுதியில் திமுக சார்பில் மலர் அஞ்சலி செலுத்தினர்.



கோவை: நீட் என்ற ஆட்கொல்லி தேர்வால் உயிரிழந்த அனிதாவின் நினைவு நாளையொட்டி, அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவப்படத்திற்கு திமுகவினர் மலர் அஞ்சலி செலுத்தி வணங்கினர்.

கடந்த 2017ம் ஆண்டு நீட் தேர்வு முறையை எதிர்த்து உச்சநீதிமன்றம் வரை சென்று போராடிய அரியலூரைச் சேர்ந்த மாணவி அனிதா இதே நாளில் தற்கொலை செய்து கொண்டார்.

அது அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து திமுகவினர் ஆண்டுதோறும் அவரது நினைவு நாளில் அனிதாவின் திருவுருவப்படத்திற்கு மலரஞ்சலி செலுத்தி வருகின்றனர். திமுக சார்பில் அனிதா அச்சீவர் அகாடமி என்ற பெயரில் இலவச பயிற்சியுடன் கூடிய வேலை வாய்ப்பை பெறும் வகையில் பயிற்சி வழங்கி வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று அனிதாவின் நினைவு நாளில் தமிழகம் முழுவதும் திமுகவினர் அவரது திருவுருவப் படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.



இதன் ஒரு பகுதியாக கோவை வீரபாண்டி பிரிவு பகுதியில் திமுக சார்பில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அனிதாவின் திருவுருவப் படத்திற்கு கூடலூர் கவுண்டம்பாளையம் நகராட்சி தலைவர் அறிவரசு தலைமையில் மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.



இதில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என கோரி கோஷங்களை எழுப்பினர்.



இந்த நிகழ்ச்சியில் திமுக கவுன்சிலர்கள், பொதுமக்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...