திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே பூளவாடி பொம்மநாயக்கன்பட்டியில் உள்ள ஸ்ரீ மாகாளியம்மன், செல்வவிநாயகர் திருக்கோவில் அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேக விழா வேத சிவாகம் முறைப்படி பல்லாக்கோவில் ஸ்ரீமடம் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ சாமி கண்ணு தியாகராஜ குருஸ்சுவாமிகள் முன்னிலையில் பல்வேறு புன்னிய தலங்களில் இருந்து கொண்டு வரபட்ட புனித நீர் கோபுர கலசங்கள் மீது ஊற்றபட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
திருப்பூர்: ஸ்ரீ மாகாளியம்மன் , செல்வவிநாயகர் திருக்கோவில் கும்பாவிஷேக விழா கோலாகலமாக நடைபெற்றது. இதில் சுற்றுவட்டராப்பகுதிகளை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்று சிறப்பு வழிபாடு நடத்தினர்.
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே பூளவாடி பொம்மநாயக்கன்பட்டியில் உள்ள ஸ்ரீ மாகாளியம்மன், செல்வவிநாயகர் திருக்கோவில் அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேக விழா வேத சிவாகம் முறைப்படி பல்லாக்கோவில் ஸ்ரீமடம் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ சாமி கண்ணு தியாகராஜ குருஸ்சுவாமிகள் முன்னிலையில் பல்வேறு புன்னிய தலங்களில் இருந்து கொண்டு வரபட்ட புனித நீர் கோபுர கலசங்கள் மீது ஊற்றபட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
முன்னதாக அதிகாலை மங்கள இசை, விநாயகர் பூஜை, புன்யாக வாஜனம், பஞ்சகெள பூஜை, நான்காம் கால பூஜை, மகாதீபாராதனை உட்பட பல்வேறு சிறப்பு பூஜைகள் மேற்கொள்ளப்பட்டன.
பின்னர் ஸ்ரீ மாகாளி அம்மனுக்கு பல வகை அபிஷேகம் மேற்கொண்டு, சிறப்பு பூஜைகள், கோமாதா பூஜை சிறப்பாக நடைபெற்றது.
கும்பாபிஷேக பெருவிழாவில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரத்துக்கு மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் ஊர் கவுண்டர் மற்றும் பொதுமக்கள் ஏற்பாடுகள் செய்து இருந்தனர்.