துடியலூரில் உள்ள ராஜகணபதி கோவிலில் கும்பாபிஷேகம் - சுற்றுவட்டாரப்பகுதி பக்தர்கள் பங்கேற்பு

கோவை துடியலூரை அடுத்த தொப்பம்பட்டி பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு அரசடி ஸ்ரீ இராஜகணபதி திருக்கோவில் மற்றும் அருள்மிகு சிவகாமி அம்பிகை சமேத அருள்மிகு ஸ்ரீ வெள்ளிமலை சிவசங்கரேஸ்வரர் திருக்கோவிலில் நூதன ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.



கோவை: அருள்மிகு அரசடி ஸ்ரீ இராஜகணபதி திருக்கோவில் மற்றும் அருள்மிகு சிவகாமி அம்பிகை சமேத அருள்மிகு ஸ்ரீ வெள்ளிமலை சிவசங்கரேஸ்வரர் திருக்கோவிலில் நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் சுற்று வட்டாரங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் மகா அன்னதானம் வழங்கப்பட்டது.

கோவை துடியலூரை அடுத்த தொப்பம்பட்டி பகுதியில் அமைந்துள்ளது அருள்மிகு அரசடி ஸ்ரீ இராஜகணபதி திருக்கோவில் மற்றும் அருள்மிகு சிவகாமி அம்பிகை சமேத அருள்மிகு ஸ்ரீ வெள்ளிமலை சிவசங்கரேஸ்வரர் திருக்கோவில். இக்கோவில் திருப்பணிகள் சாக்த ஸ்ரீ வாராகி மணிகண்ட சுவாமிகள் நல்லாசியுடன் நடைபெற்று கும்பாபிஷேக பணிகள் நடைபெற்றன.

இதையடுத்து கோவிலில் நூதன ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா கடந்த வியாழக்கிழமை கிராம தேவதை வழிபாட்டுடன் தொடங்கி முளைப்பாரி, தீர்த்தக் குட ஊர்வலம் நடைபெற்றது. தொடர்ந்து வெள்ளிக்கிழமை முதற்கால வேள்வி பூஜைகள் நடைபெற்றன. சனிக்கிழமை இரண்டாம் கால யாகம், மூன்றாம் கால யாகங்கள் நடைபெற்றன.



இன்று காலை நான்காம் கால யாக பூஜைகள் நடைபெற்று கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி நூதன ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை காரமடை சிவஸ்ரீ ஆதியோகேஸ்வர சிவம் குழுவினர் நடத்திவைத்தனர்.



தொடர்ந்து அபிஷேக அலங்கார பூஜைகள் நடைபெற்றன.



இதில் சுற்று வட்டாரங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் மகா அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் விழாக் குழுவினர் செய்திருந்தனர்.

Newsletter

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள்" குறித்த செய்முறைப் பயிற்சி

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மே 19-22, 2026 வரை தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள் குறித்த ச...

கோவை வேலைவாய்ப்பு பதிவுக்கு கட்டணம் இல்லை; போலி விளம்பரங்களை நம்ப வேண்டாம் - ஆட்சியர் எச்சரிக்கை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தின் அனைத்து சேவைகளும் இலவசம் என்றும், WhatsApp, Facebook, YouTube, Instagram போன்ற தளங்கள...

கோவை ஆனைகட்டியில் பழங்குடியினருக்கான ITI சேர்க்கை: ஜூன் 3 வரை விண்ணப்பிக்கலாம்- கோவை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோவை ஆனைகட்டியில் அமைந்துள்ள பழங்குடியினருக்கான அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026-27 கல்வியாண்டுக்கான சேர்க்கைக்கு ஜூன...

கவுண்டம்பாளையத்தில் பெண்களிடம் ஆபாச சைகைகள் காட்டி அச்சுறுத்திய நபர் மீது கைது நடவடிக்கை

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் பெண்களை குறிவைத்து அரை நிர்வாணமாக நின்று ஆபாச சைகைகள் காட்டி அச்சுறுத்திய 38 வயது நபரை போ...

ஆனைகட்டி அருகே உக்ரைன் சுற்றுலா பயணியை விரட்டிய காட்டு யானை

கோவை மாவட்டம் ஆனைகட்டி அருகே ஒற்றை காட்டு யானை விரட்டியதால் உயிர் தப்பிக்க ஓடிய உக்ரைன் நாட்டைச் சேர்ந்த சுற்றுலா பயணி ப...