பல்லடத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் வெட்டி படுகொலை..!! குடிபோதையில் ஏற்பட்ட சண்டையில் தீர்த்துக்கட்டிய கும்பல்

பல்லடத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் வெட்டிக்கொல்லப்பட்டதை கண்டித்து திருப்பூர் மாவட்டம் பல்லடம் அரசு மருத்துவமனை முன்பு உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் நான்கு பேரையும் மூன்று பேர் கொண்ட கும்பல் தீர்த்துக்கட்டியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



திருப்பூர்: இரண்டு பெண்கள் உட்பட நான்பேரை வெட்டி சாய்த்துவிட்டு தப்பியோடிய மூன்று பேரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். அவர்கள் விட்டுச்சென்ற பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.



திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த மாதப்பூர் கள்ளக்கிணறு பகுதியைச் சேர்ந்த சண்முகம் மகன் செந்தில்குமார் 47. இவரது உறவினர்கள் பழனிசாமி மகன் மோகன்ராஜ் 49. பழனிசாமி மகள் புஷ்பவதி 67. சுப்பிரமணியம் மனைவி ரத்தினாம்பாள் 58 ஆகிய நான்கு பேரும் அறிவாளால் வெட்டி கொலை செய்யப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் கிடந்தனர்.



அப்பகுதியினர் அளித்த தகவலின் பேரில் பல்லடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.



பல்லடத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் வெட்டிக்கொல்லப்பட்டதை கண்டித்து திருப்பூர் மாவட்டம் பல்லடம் அரசு மருத்துவமனை முன்பு உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனை தொடர்ந்து கோவை மேற்கு மண்டல ஐஜி பவானீஸ்வரி இந்த மறியல் போராட்டத்தை தொடர்ந்து பல்லடம் அரசு மருத்துவமனையில் ப்ரீசர் பாக்ஸ் இல்லாத காரணத்தால் போராட்டம் நடைபெற்றது என காவல்துறையினர் தெரிவித்தனர்.

செந்தில்குமாரிடம் டிரைவராக வேலை பார்த்த வெங்கடேசன் மற்றும் அவருடன் வந்த 2 பேரும் கொலை செய்துவிட்டு தப்பி ஓடியதாக போலீசாரின் முதல் கட்ட தகவலில் தெரியவந்துள்ளது. குடிபோதையில் ஏற்பட்ட பிரச்சனையை தொடர்ந்து கொலை செய்துவிட்டு மூன்று பேரும் தப்பி ஓடியதாக கூறப்படுகிறது.



கொலையாளிகள் விட்டுச் சென்ற இரண்டு பைக்குகள் மற்றும் சிசிடிவி., காட்சிகளை போலீசார் கைப்பற்றியுள்ளனர். மோப்பநாய் மற்றும் கைரேகை நிபுணரை வரவழைத்து போலீசார் மேற்கொண்டு வருகின்றனர். நான்கு பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...