கோவையில் சட்டப்பேரவை பொது நிறுவனங்கள் குழு தலைவர் தலைமையில் ஆய்வு கூட்டம்!

சட்ட பேரவை பொது நிறுவனங்கள் குழு தலைவர் சௌந்தரபாண்டியன் மற்றும் குழு உறுப்பினர்கள் தலைமையில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், தணிக்கை பத்திகள் மீதான ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன.


கோவை: தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொது நிறுவனங்கள் குழு தலைவர் சௌந்தரபாண்டியன் தலைமையில் தணிக்கை பத்திகள் மீதான ஆய்வு கூட்டம் கோவையில் நடைபெற்றது.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொது நிறுவனங்கள் குழு தலைவர் சௌந்தரபாண்டியன் மற்றும் குழு உறுப்பினர்கள் தலைமையில் தணிக்கை பத்திகள் மீதான துறை சார்ந்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொது குழு நிறுவனங்கள் குழு உறுப்பினர்கள் ஆகிய சட்டமன்ற உறுப்பினர்கள் அப்துல் சமது, உடுமலை ராதாகிருஷ்ணன், கிரி, கோவிந்தசாமி, செந்தில்குமார், பிரகாஷ் மற்றும் தமிழ்நாடு சட்டப்பேரவை இணை செயலாளர் பாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.



இக்கூட்டத்தில் ஆறு பயனாளிகளுக்கு ஆதிதிராவிடர் நத்தம் நிலங்களில் வழங்கப்படும். வீட்டுமனை ஒப்படைப்புக்கான இணைய வழி பட்டாக்களையும் சாலை விபத்தில் மரணம் அடைந்த பத்து நபர்களின் குடும்பத்தாருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியின் கீழ் தலா ஒரு லட்சம் ரூபாய் கான நிவாரண நிதிக்கான காசோலை, தாட்கோ சார்பில் 19.10 லட்சம் மானியத்தில் ஐந்து பயனாளிகளுக்கு லோடு ஆட்டோ சுற்றுலா வாகனங்களுக்கான கடன் உதவிகளையும் தமிழ்நாடு தூய்மை பணியாளர் நல வாரியத்தில் உறுப்பினராக உள்ள 7 தூய்மை பணியாளர்களுக்கு அடுக்குமாடி குடியிருப்பில் வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டதற்கான ஆணைகளையும் தமிழ்நாடு சட்டப்பேரவை பொது நிறுவனங்கள் குழு தலைவர் சௌந்தர பாண்டியன் வழங்கினார்.

இந்நிகழ்வில் கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்திகுமார், மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்த் குமார், மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...