கோவையில் ஓடும் ரயிலில் ஏற முயன்று தவறி விழுந்ததில் ஒருவருக்கு கை துண்டானது


ராமேஸ்வரத்தை சேர்ந்தவர் பூமாரி, கூலி வேலை செய்து வருகிறார். இவர், இன்று காலை கோவையிலிருந்து சென்னை செல்லும் இண்டர்சிட்டி ரயில் இரண்டாவது பிளாட்பாரத்தில் இருந்து புறப்படும் போது அதில் ஏற முயன்றுள்ளார். 

இதற்குள்ளாக ரயில் புறப்படத்தொடங்கவே நிலைதடுமாறிய பூமாரி தவறி கீழே விழுந்ததில் அவரது கை மீது ரயில் சக்கரம் ஏறியுள்ளது. இதில் பூமாரியின் கை துண்டானது.

இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பயணிகள் அந்த ரயிலின் சங்கிலியை பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தினர். இதுகுறித்து தகவலறிந்து அங்கு வந்த ரயில்வே காவல்துறையினர் துண்டான கையுடன் வலியில் தவித்துக் கொண்டிருந்த பூமாரியை மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவத்தால் கோவையிலிருந்து சென்னை செல்லும் இன்டர்சிட்டி ரயில் 20 நிமிடம் தாமதமாக புறபட்டு சென்றது. இச்சம்பவம் குறித்து ரயில்வே காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...