கோவை குரும்பபாளையத்தில் இயங்கி வரும் பவுண்டரிகளை அகற்ற வேண்டும் - பொதுமக்கள் கோரிக்கை!

சர்க்கார் சாமகுளம் பேரூராட்சிக்கு உட்பட்ட குரும்பபாளையம் அடுத்த பழனி கிருஷ்ணா கார்டன் பகுதியில் இயங்கி வரும் பவுண்டரிகளால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதால், பவுண்டரிகளை அகற்ற வேண்டும் என வலியுறுத்தி அப்பகுதி மக்கள் பேரூராட்சி செயல் அலுவலரிடம் மனு அளித்துள்ளனர்.


கோவை: குரும்பபாளையம் அடுத்த பழனி கிருஷ்ணா கார்டன் பகுதியில் உள்ள பவுண்டரிகளை அகற்ற வலியுறுத்தி பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.

சர்க்கார் சாமகுளம் பேரூராட்சிக்கு உட்பட்ட குரும்பபாளையத்தில் 10-வது வார்டுக்கு உட்பட்ட பழனி கிருஷ்ணா கார்டன் பகுதிக்கு அருகில் 100 மீட்டர் தொலைவிற்குள் குடியிருப்பு பகுதியாக தர வகைப்படுத்தப்பட்ட நிலங்களில் வாடகைக்கு பல பவுண்டரிகள் இயங்கி வருகின்றன.



இந்த பவுண்டரிகளில் இருந்து கரும்புகையும், நச்சுப் புகையும் அதிக அளவு வெளிவந்து அருகில் வசிக்கும் குழந்தைகள் மற்றும் பொதுமக்களுக்கு மூச்சுத்திணறல், ஆஸ்துமா, அலர்ஜி மற்றும் நுரையீரல் தொடர்புடைய பல பாதிப்புகளை ஏற்படுத்துகின்றது.



இந்த பவுண்டரிகள் முறையான அனுமதி பெற்று இயங்குகின்றதா? என்ற சந்தேகம் மக்களுக்கு உள்ளது. மேலும் எவ்வித மாசு கட்டுப்பாட்டு நடைமுறைகளும் பின்பற்றப்படுவதாக தெரியவில்லை.

இது குறித்து பல ஆண்டுகளாக மாசு கட்டுப்பாட்டு வாரியம், முதலமைச்சர் தனிப்பிரிவு என மனு அளிக்கப்பட்டும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. மேலும் பேரூராட்சி செயல் அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகள் வந்து எச்சரித்து சென்ற பிறகும் பவுண்டரிகள் தொடர்ந்து புகையை வெளியேற்றி வருகின்றன.

மேலும் கரிய நிற நுண் துகள்கள் வீடுகளிலும், மரங்களிலும் படிகிறது. எனவே மக்கள் நலனுக்கு முக்கியத்துவம் அளிக்கும் இந்த ஆட்சியில் குரும்பபாளையம் பகுதி மக்கள் நச்சுப் புகை மற்றும் மணல் துகள்களை சுவாசிக்கும் அவலத்தில் இருந்து விடுதலை பெற்று சுத்தமான காற்றை சுவாசிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதன்படி, குடியிருப்பு பகுதிக்கு அருகாமையில் விதிகளுக்கு புறம்பாக வாடகைக்கு இயங்கி வருகின்ற அனைத்து பவுண்டரிகளையும் இப்பகுதியில் இருந்து நிரந்தரமாக அப்புறப்படுத்த வழிவகை செய்திட சர்க்கார் சாமக்குளம் பேரூராட்சி செயல் அலுவலரிடம் கடந்த ஆகஸ்டு 31ஆம் தேதி அப்பகுதி மக்கள் மனு கொடுத்தனர்.

அந்த மனுவில், பலமுறை புகார் அளித்தும் நீங்கள் அறிவுறுத்தியும் எதற்கும் கட்டுப்படாமல் தொடர்ந்து இயங்கி பொதுமக்கள் பாதுகாப்புக்கு அச்சுறுத்துவதோடு முறையான அனுமதி பெறாமல் இயங்கி வரும் பவுண்டரிகளுக்கு விடிவு கட்டாவிட்டால் பேரூராட்சி முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என்று ஊர் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...