நாட்டின் பெயரை பாரத் என மாற்றுவதற்கு அதிமுக ஆதரவு!

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் செய்தியாளரிடம் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், பாரத் என்ற பெயரை அனைவரும் விரும்புவதாகவும், ஆகையால் நாட்டின் பெயரை பாரத் என்று மாற்றுவதில் எந்த தவறும் இல்லை, இதற்கு எடப்பாடி பழனிசாமியே ஆதரவு தெரிவித்துள்ளதாக கூறியுள்ளார்.


மதுரை: பாரத் என்ற பெயரை அனைவரும் விரும்புகின்றனர். அதனால் இந்தியா என்பதை மாற்றுவது தவறில்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

பி.கே.மூக்கையா தேவரின் நினைவு நாளையொட்டி மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கல்லூரியில் அமைந்திருக்கும் அவரின் நினைவிடத்தில், அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், உசிலம்பட்டியில் பி.கே.மூக்கையா தேவர் சிலை அமைக்க, அதிமுக ஆட்சி காலத்தில் எடப்பாடி பழனிசாமி சிறப்பு சட்டத்தை நிறைவேற்றி தந்தார்.

இந்தியாவுக்கு பாரதம் என்று பெயர் வைத்தால் தவேறு ஒன்றும் இல்லை. திமுகவை சேர்ந்த டி.ஆர்.பாலுவே இதனை ஒப்புக் கொண்டுள்ளார். பாரதம் என்ற பெயரை அனைவரும் விரும்புகிறார்கள்.

இதற்கு எடப்பாடி பழனிசாமி ஆதரவு தெரிவித்துள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள்" குறித்த செய்முறைப் பயிற்சி

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மே 19-22, 2026 வரை தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள் குறித்த ச...

கோவை வேலைவாய்ப்பு பதிவுக்கு கட்டணம் இல்லை; போலி விளம்பரங்களை நம்ப வேண்டாம் - ஆட்சியர் எச்சரிக்கை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தின் அனைத்து சேவைகளும் இலவசம் என்றும், WhatsApp, Facebook, YouTube, Instagram போன்ற தளங்கள...

கோவை ஆனைகட்டியில் பழங்குடியினருக்கான ITI சேர்க்கை: ஜூன் 3 வரை விண்ணப்பிக்கலாம்- கோவை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோவை ஆனைகட்டியில் அமைந்துள்ள பழங்குடியினருக்கான அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026-27 கல்வியாண்டுக்கான சேர்க்கைக்கு ஜூன...