தில்லி ஜெ.என்.யு. மாணவர் தற்கொலை குறித்து மத்திய அரசு நடவடிக்கை கோரி கோவையில் இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

சேலத்தைச் சேர்ந்த முத்துகிருஷ்ணன் தில்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் ஆராய்ச்சிப் பட்டப்படிப்பு படித்து வந்தார். இந்நிலையில், திங்களன்று (மார்ச் 13) திடீரென முத்துகிருஷ்ணன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். தமிழகத்தைச் சேர்ந்த இளைஞர் தில்லி ஜெ.என்.யு-வில் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.



இதனிடையே, கோவையில் இந்திய மாணவர் சங்கத்தினர் 20-க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் உள்ள வாடிக்கையாளர் சேவை மைய அலுவலகத்தை முற்றுகையிட்டு  ஆர்ப்பாட்டம் நடத்த முயன்றதைத் தொடர்ந்து அலுவலக வாயில் மூடப்பட்டது.

இதனைத் தொடர்ந்து வாயில் முன்பு அமர்ந்த மாணவர்கள், மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.

ஜாதிய கட்டமைப்பு காரணமாகவே இவ்வாறு தற்கொலைகள் தொடர்ந்து வருவதாக தெரிவித்த மாணவர்கள், இதுகுறித்து மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ளாவிட்டால் போராட்டங்கள் தொடரும் என தெரிவித்தனர்.



இதனைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய மாணவர் சங்கத்தினரை காவல்துறையினர் கைது செய்தனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...