விலைவாசி உயர்வு மற்றும் வேலையின்மையை கண்டித்து திருப்பூரில் சாலைமறியலில் ஈடுபட்ட 300க்கும் மேற்பட்ட இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரை காவல்துறையினர் கைது செய்தனர்.
திருப்பூர்: விலையை குறைக்க, வேலை கிடைக்க, ஊழல் நிறைந்த மோடி தலைமையிலான பாஜக அரசை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என ஒன்றிய அரசுக்கு எதிராக நடைபெற்ற சாலை மறியலில் இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் முழக்கமிட்டனர்.
நாட்டு மக்களின் கழுத்தை நெரிக்கும் விலைவாசி உயர்வு, வேலை இன்றி கலங்கி தவிக்கும் வேலையில்லாத இளைஞர்கள், ஆகியவற்றை எடுத்துரைக்கும் விதமாக, மத்திய அரசை கண்டித்து, வேலை கொடு, விலையை குறைத்திடு என்ற கோஷத்துடன் இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக திருப்பூர் மத்திய கலைஞர் பேருந்து நிலையம் முன்பாக சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து விலையை குறைக்க, வேலை கிடைக்க, ஊழல் நிறைந்த மோடி தலைமையிலான பாஜக அரசை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என ஒன்றிய அரசுக்கு எதிராக முழக்கமிட்ட 300க்கும் மேற்ப்பட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர், பேருந்து நிலையம் முன்பு சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
மறியல் செய்த அனைவரையும் கைது செய்த போலீசார் தனியார் திருமண மண்டபத்திற்கு அழைத்துச் சென்றனர்.