செம்மொழி பூங்கா அமையவுள்ள இடத்தில் நகர்ப்புற நிதி உட்கட்டமைப்பு நிறுவன மேலாண் இயக்குனர் ஆய்வு!

கோவை காந்திபுரத்தில் உள்ள சிறைச்சாலை வளாகத்தில் ரூ.172.25 கோடி மதிப்பீட்டில் செம்மொழி பூங்கா அமையவுள்ள இடத்தில் பூர்வாங்க பணி மேற்கொள்வது குறித்து நகர்ப்புற நிதி உட்கட்ட அமைப்பு நிறுவன மேலாண் இயக்குனர் விஜயகுமார் ஆய்வு மேற்கொண்டார்.


கோவை: கோவை காந்திபுரத்தில் செம்மொழி பூங்கா அமையவுள்ள இடத்தில் நகர்ப்புற நிதி உட்கட்டமைப்பு நிறுவன மேலாண் இயக்குனர் விஜயகுமார் ஆய்வு மேற்கொண்டார்.



கோவை காந்திபுரம் சிறைச்சாலை வளாகத்தில் ரூபாய் 172.25 கோடி மதிப்பீட்டில் செம்மொழி பூங்கா அமையவுள்ள இடத்தில் பணிகள் துவங்குவதற்கு பூர்வாங்க பணி மேற்கொள்வது குறித்து தமிழ்நாடு நகர்ப்புற நிதி உட்கட்ட அமைப்பு நிறுவன மேலாண்மை இயக்குனர் எஸ். விஜயகுமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.



இந்த ஆய்வில் நகராட்சி ஆணையாளர் மு பிரதாப், நகர்ப்புற நிதி உட்கட்டமைப்பு நிறுவன முதுநிலை துணைத்தலைவர் ராஜேந்திரன், சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளையின் திட்ட இயக்குநர் ராமமூர்த்தி, மாநகர பொறியாளர் சுகந்தி, உதவி ஆணையாளர் மகேஷ் கனகராஜ், செயற்பொறியாளர்கள் இளங்கோவன், முருகேசன், மாநகர நகரமைப்பு அலுவலர் குமார், உதவி பொறியாளர் கமல கண்ணன் உதவி நகரமைப்பு அலுவலர் சத்யா ஆகியோர் கலந்து கொண்டனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...