கோவை மாநகராட்சி, தெற்கு மண்டலத்திற்குட்பட்ட சிங்காநல்லூர்- வெள்ளலூர் சாலையில் குடிநீர் பெறப்படும் பில்லூர் பிரதான குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால் குடிநீர் நிறுத்தப்பட்டுள்ளது என மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் இன்று தகவல் தெரிவித்தார்.
இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் தெரிவிக்கையில், 'கோவை மாநகராட்சி, தெற்கு மண்டலத்திற்கு குடிநீர் பெறப்படும் பில்லூர் பிரதான குழாயில் சிங்காநல்லூர்-வெள்ளலூர் சாலையில், வெள்ளலூர் ஆரம்ப சுகாதார நிலையம் அருகில் உள்ள குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால் குடிநீர் நிறுத்தப்பட்டுள்ளது.
இதனால் மேட்டூர் மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி மற்றும் சாரதா மில் சாலை நீர்த்தேக்கத் தொட்டிகளுக்குட்பட்ட குறிச்சி பகுதிகளுக்கு (வார்டு எண்கள் : 95, 96, 97, 98, 99 மற்றும் 100) குடிநீர் விநியோக இடைவெளி நாட்கள் (இரண்டு அல்லது மூன்று தினங்கள்) கூடுதலாக வாய்ப்புள்ளது'.
இவ்வாறு மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் தெரிவித்தார்.