பில்லூர் பிரதான குழாய் உடைந்ததால் கோவை தெற்கு மண்டலத்தில் குடிநீர் விநியோகிப்பதில் இடையூறு



கோவை மாநகராட்சி, தெற்கு மண்டலத்திற்குட்பட்ட சிங்காநல்லூர்- வெள்ளலூர் சாலையில் குடிநீர் பெறப்படும் பில்லூர் பிரதான குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால் குடிநீர் நிறுத்தப்பட்டுள்ளது என மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் இன்று தகவல் தெரிவித்தார்.

இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் தெரிவிக்கையில், 'கோவை மாநகராட்சி, தெற்கு மண்டலத்திற்கு குடிநீர் பெறப்படும் பில்லூர் பிரதான குழாயில் சிங்காநல்லூர்-வெள்ளலூர் சாலையில், வெள்ளலூர் ஆரம்ப சுகாதார நிலையம் அருகில் உள்ள குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால் குடிநீர் நிறுத்தப்பட்டுள்ளது. 

இதனால் மேட்டூர் மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி மற்றும் சாரதா மில் சாலை நீர்த்தேக்கத் தொட்டிகளுக்குட்பட்ட குறிச்சி பகுதிகளுக்கு (வார்டு எண்கள் : 95, 96, 97, 98, 99 மற்றும் 100) குடிநீர் விநியோக இடைவெளி நாட்கள் (இரண்டு அல்லது மூன்று தினங்கள்) கூடுதலாக வாய்ப்புள்ளது'.

இவ்வாறு மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் தெரிவித்தார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...