கோவையில் பி.பி.ஜி.ஆப்டோமெட்ரி கல்லூரி சார்பில் கண் தானம் குறித்த விழிப்புணர்வு மனித சங்கிலி!

பொதுமக்களிடம் கண் தானம் குறித்த விழிப்புணர்வை அதிகரிக்கும் விதமாக கோவையில் பி.பி.ஜி.ஆப்டோமெட்ரி கல்லூரி மற்றும் அகர்வால் கண் மருத்துவமனை சார்பாக நடைபெற்ற விழிப்புணர்வு மனித சங்கிலியை கோவை மாநகர காவல்துறை துணை ஆணையர் சந்தீஷ் துவக்கி வைத்தார்.



கோவை: கோவை பி.பி.ஜி. ஆப்டோமெட்ரி கல்லூரி மற்றும் அகர்வால் கண் மருத்துவமனை சார்பாக கண் தானம் குறித்த விழிப்புணர்வு மனித சங்கிலி நடைபெற்றது.

கண் தானம் குறித்த விழிப்புணர்வை அதிகரிக்கும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 25 ஆம் தேதி முதல் செப்டம்பர் 8 ந்தேதி வரை இரண்டு வாரம் தேசிய கண் தான விழிப்புணர்வு வாரங்களாக அனுசரிக்கப்படுகிறது.



இந்நிலையில் கோவையில் கண் தானம் குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடம் அதிகரிக்கும் நோக்கத்தில் பி.பி.ஜி.கல்வி குழுமங்களின் தலைவர் டாக்டர் தங்கவேலு அறிவுறுத்தலின் பேரில், கோவை சரவணம்பட்டி, பி.பி.ஜி.ஆப்தோமெட்ரி கல்லூரி மற்றும் வடகோவை அகர்வால் கண் மருத்துவமனை ஆகியோர் இணைந்து மனித சங்கிலி நடைபெற்றது.



இதில் கோவை மாநகர காவல் துறை துணை ஆணையர் சந்தீஷ் கலந்து கொண்டு மனித சங்கிலியை துவக்கி வைத்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது,



கண் தானம் குறித்த போதிய விழிப்புணர்வு இல்லாததால் கண் தானம் செய்வோர் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இது போன்ற நிகழ்ச்சிகள் கண் தானம் குறித்த விழிப்புணர்வை அதிகரிக்கும். இவ்வாறு அவர் பேசினார்.

இதனை தொடர்ந்து பி.பி.ஜி.ஆப்தோமெட்ரி கல்லூரி முதல்வர் ஜெசிந்தா பேசியதாவது, கண்களை தானம் செய்வதால், பார்வையற்ற பலரின் வாழ்வில் ஓளியேற்ற முடியும் என்ற நோக்கத்தில் இது போன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது என தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், அகர்வால் கண் மருத்துவமனை மருத்துவர் ஜெயஸ்ரீ, உட்பட பலர் கலந்து கொண்டனர்.



மனித சங்கிலியில் கலந்து கொண்ட பி.பி.ஜி.கல்லூரி மாணவ, மாணவிகள் ‘உங்கள் கண்கள் வேறோருவரின் உலகமாக அமையட்டும்', ”கடவுளின் பரிசை ஏன் அழிக்க வேண்டும்” போன்ற வாசகங்கள் கொண்ட பதாகைகளை ஏந்தியபடி அணி வகுத்து நின்றனர்.

Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...