தேசிய ஒற்றுமைக்கு எதிராக பேசும் நடிகர் கமலஹாசன் மீது நடவடிக்கை கோரி இந்து மகா சபையினர் ஆட்சியரிடம் மனு

சட்டத்திற்கு  எதிராகவும், தேசிய ஒற்றுமைக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் பேசும் நடிகர் கமலஹாசன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அனைத்து இந்திய இந்து மகாசபையினர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

அம்மனுவில், நடிகர் கமலஹாசன் நேற்று தனியார் தொலைகாட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் சில கருத்துகளை தெரிவித்தார். இதில் கமலஹாசன் தமிழக அரசியல் சட்டத்திற்கு  புறம்பான வகையில் பேசி தவறான விமர்சனங்களை பரப்பி வருவதாகவும், மக்களால் தேர்தெடுக்கபட்ட சட்ட மன்றத்தை கலைத்து மீண்டும் தேர்தலை நடத்த வேண்டும் என பேசியதாக மனுவில் கூறப்பட்டுள்ளது.

மேலும், விஸ்வரூபம் திரைப்படத்தை திரையிடவிடாமல் அரசியலில் உள்ள நபர்களால் என்று அவர் கூறியுள்ள கருத்தை ஏற்கமுடியாது எனவும், திரைபடம் தொடர்பாக நடிகர் கமலஹாசன் கூறியுள்ளது யாரோ சிலரின் தூண்டுதலின் பேரில் உள்நோக்கதுடன் பேசி வருவதாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தொடர்ந்து சட்டத்திற்கு எதிராகவும், தேசிய ஒற்றுமைக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் பேசும் நடிகர் கமலஹாசன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அனைத்து இந்திய இந்து மகாசபையினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...