சட்டத்திற்கு எதிராகவும், தேசிய ஒற்றுமைக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் பேசும் நடிகர் கமலஹாசன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அனைத்து இந்திய இந்து மகாசபையினர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
அம்மனுவில், நடிகர் கமலஹாசன் நேற்று தனியார் தொலைகாட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் சில கருத்துகளை தெரிவித்தார். இதில் கமலஹாசன் தமிழக அரசியல் சட்டத்திற்கு புறம்பான வகையில் பேசி தவறான விமர்சனங்களை பரப்பி வருவதாகவும், மக்களால் தேர்தெடுக்கபட்ட சட்ட மன்றத்தை கலைத்து மீண்டும் தேர்தலை நடத்த வேண்டும் என பேசியதாக மனுவில் கூறப்பட்டுள்ளது.
மேலும், விஸ்வரூபம் திரைப்படத்தை திரையிடவிடாமல் அரசியலில் உள்ள நபர்களால் என்று அவர் கூறியுள்ள கருத்தை ஏற்கமுடியாது எனவும், திரைபடம் தொடர்பாக நடிகர் கமலஹாசன் கூறியுள்ளது யாரோ சிலரின் தூண்டுதலின் பேரில் உள்நோக்கதுடன் பேசி வருவதாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தொடர்ந்து சட்டத்திற்கு எதிராகவும், தேசிய ஒற்றுமைக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் பேசும் நடிகர் கமலஹாசன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அனைத்து இந்திய இந்து மகாசபையினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
அம்மனுவில், நடிகர் கமலஹாசன் நேற்று தனியார் தொலைகாட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் சில கருத்துகளை தெரிவித்தார். இதில் கமலஹாசன் தமிழக அரசியல் சட்டத்திற்கு புறம்பான வகையில் பேசி தவறான விமர்சனங்களை பரப்பி வருவதாகவும், மக்களால் தேர்தெடுக்கபட்ட சட்ட மன்றத்தை கலைத்து மீண்டும் தேர்தலை நடத்த வேண்டும் என பேசியதாக மனுவில் கூறப்பட்டுள்ளது.
மேலும், விஸ்வரூபம் திரைப்படத்தை திரையிடவிடாமல் அரசியலில் உள்ள நபர்களால் என்று அவர் கூறியுள்ள கருத்தை ஏற்கமுடியாது எனவும், திரைபடம் தொடர்பாக நடிகர் கமலஹாசன் கூறியுள்ளது யாரோ சிலரின் தூண்டுதலின் பேரில் உள்நோக்கதுடன் பேசி வருவதாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தொடர்ந்து சட்டத்திற்கு எதிராகவும், தேசிய ஒற்றுமைக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் பேசும் நடிகர் கமலஹாசன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அனைத்து இந்திய இந்து மகாசபையினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.