துணை வேந்தர் நியமனத்தில் ஆளுநரின் வழக்கத்திற்கு மாறான செயல்பாட்டை கண்டித்து இந்திய மாணவர் சங்கம் போராட்டம்!

துணை வேந்தர் நியமனத்தில் தமிழகத்தில் வழக்கத்திற்கு மாறாக பல்கலைக்கழக மானிய குழுவின் பிரதிநிதியையும் சேர்த்து தேடுதல் குழுவை அமைத்துள்ள ஆளுநரின் நடவடிக்கையை கண்டித்து கோவையில் உள்ள பாரதியார் பல்கலைக்கழகம் முன்பு இந்திய மாணவர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


கோவை: துணை வேந்தர் நியமனத்தில் ஆளுநரின் வழக்கத்திற்கு மாறான செயல்பாட்டை கண்டித்து இந்திய மாணவர் சங்கம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாட்டில் கோவையில் உள்ள பாரதியார் பல்கலைக்கழகம், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம், சென்னை பல்கலைக்கழகங்களில் துணை வேந்தரை தேர்வு செய்வதற்கு முதல்முறையாக பல்கலைக்கழக மானியக்குழுவின் பிரதிநிதியையும் சேர்த்து தேடுதல் குழுவை அமைத்து தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவித்துள்ளார்.

இதுவரை தமிழ்நாட்டில் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரை நியமனம் செய்வதற்கான தேடுதல் குழுவில் பல்கலைக்கழக சிண்டிகேட் உறுப்பினர், தமிழக அரசின் பிரதிநிதி, ஆளுநரின் பிரதிநிதி என மூன்று பேர் மட்டுமே இருந்து வந்த நிலையில் தற்போது நான்காவதாக பல்கலைக்கழக மானிய குழுவின் உறுப்பினர் ஒருவரும் சேர்த்து குழு அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு சில அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.



இந்நிலையில் கோவையில் உள்ள பாரதியார் பல்கலைக்கழகம் முன்பு இந்திய மாணவர் சங்கத்தினர் 20க்கும் மேற்பட்டோர் இந்த புதிய குழு உறுப்பினர் சேர்க்கையை எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தமிழ்நாடு ஆளுனர் தமிழக அரசுடனும் உயர்கல்விதுறை அமைச்சருடனும் கலந்தாலோசிக்காமல் தன்னிச்சையாக தேடுதல் குழுவை அறிவித்துள்ளதாகவும், இது தமிழகத்தின் வரம்புகளுக்கு மாறாகவும் வரம்பு மீறிய செயல் போன்றது என தெரிவித்தனர்.



தற்போது நியமிக்கப்பட்டுள்ளவர் ஆர் எஸ் எஸ் சிந்தனை உடையவராக இருப்பதாகவும் குற்றம்சாட்டிய மாணவர்கள், கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

Newsletter

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...

கோவை ஆட்சியர் அலுவலகத்தில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான குறைதீர் முகாம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஜூலை 10ம் தேதி காலை 10 மணிக்கு 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கான குறைதீர...