பணிநீக்க காலத்தை பணி காலமாக அறிவிக்க வேண்டும்..!! தாராபுரத்தில் நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்.!

தாராபுரத்தில் தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை, சாலை பராமரிப்பு ஊழியர் சங்கம் சார்பில் சாலை பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணி காலமாக அறிவிக்க கோரி முரசு கொட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



திருப்பூர்: 41 மாத பணிநீக்க காலத்தை பணி காலமாக அறிவிக்க வேண்டும். கூடுதலாக 10% ஆபத்துபடி உயர்வு வழங்க வேண்டும். காலியாக உள்ள 8000 சாலை பணியாளர்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்று நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள் கேட்டுகொண்டனர்.



திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



அப்போது கடந்து 2002-ஆம் ஆண்டு அதிமுக ஆட்சி காலத்தில் பத்தாயிரம் பணியாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டு, மீண்டும் 2006 ஆம் ஆண்டு திமுக ஆட்சி காலத்தில் அவர்களை பணி நியமனம் செய்யப்பட்டது.



இதில் 41 மாத பணிநீக்க காலத்தை பணி காலமாக அறிவிக்க வேண்டும். நெடுஞ்சாலை துறை பணியாளர்கள் பணி ஆபத்து பணி என்பதால் அவர்களுக்கு கூடுதலாக 10% ஆபத்துபடி உயர்வு வழங்க வேண்டும். தமிழகம் முழுவதும் நெடுஞ்சாலை கட்டுப்பாடு மற்றும் பராமரிப்பு கோட்டங்களில் காலியாக உள்ள 8000 சாலை பணியாளர்களை உடனடியாக நிரப்ப வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி முரசு கொட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Newsletter

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...

பல ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் இல்லை: தேர்தலை புறக்கணிக்க நெறையூர் கிராம மக்கள் முடிவு

குடிநீர், சாலை, போக்குவரத்து, நியாய விலைக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் பல ஆண்டுகளாக வழங்கப்படாததால், திருப்பூர் மாவட்ட...

அவிநாசி: ‘ரோடு ஷோ’ மூலம் எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டிய மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ்..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், ரோடு ஷ...

கிணத்துக்கடவில் செந்தில் வேல் பரப்புரை - சபரி கார்த்திகேயனுக்கு வாக்கு சேகரித்தார்..!

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் கே.வி.கே.எஸ். சபரி கார்த்திகேயனை ஆதரித்து பத்திரிக்கையாளரும் தமிழ்கேள்வி யூடியூ...

கோவை மக்கள் ஏப்ரல் 23ஆம் தேதி செந்தில் பாலாஜியின் முகத்திரையை கிழிப்பார்கள்: அண்ணாமலை

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை, திமுக மீது...