தாராபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் வழக்குகள் சமரச மையம் தொடக்கம்..!!

தாராபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் வழக்குகள் சமரச மையத்தை சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் கங்கா புர்வாலா காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.



திருப்பூர்: ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் துணை சமரச மையத்தை மாவட்ட நீதிபதி ஸ்வர்ணம் நடராஜன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

நிகழ்ச்சி கூடுதல் அமர்வு மாவட்ட நீதிபதி ஜான் மனோ, சார்பு நீதிபதி எம். தர்மபிரபு, உரிமையல் நீதிபதி மதிவதனி வணங்காமுடி, குற்றவியல் நடுவர் எஸ். பாபு உள்ளிட்ட நீதிபதிகள் முன்னிலையில் நடைபெற்றது.



தாராபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் வழக்குகள் சமரச மையத்தை சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் கங்கா புர்வாலா காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து தாராபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் துணை சமரசம் மையத்தை மாவட்ட நீதிபதி நடராஜ் தொடங்கி வைத்தார்.

தமிழகம் முழுவதும் தாலுக்கா அளவில் உள்ள அனைத்து நீதிமன்றங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளவற்றை விரைவாக முடிக்க வேண்டி சென்னை உயர்நீதிமன்றம் ஆணை பிறப்பித்தது. அதன் அடிப்படையில் தமிழகத்தில் உள்ள 120 தாலுக்கா நீதிமன்றத்தில் சமரச மையங்களை திறக்க முடிவு செய்யப்பட்டது.

அதன் அடிப்படையில் சென்னையில் அதற்கான காணொளி காட்சி தொடக்க விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் தலைமை நீதிபதி சஞ்சய் கங்கா புர்வாலா தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து திருப்பூர் மாவட்டம் தாராபும் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் துணை சமரச மையத்தை மாவட்ட நீதிபதி ஸ்வர்ணம் நடராஜன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.



நிகழ்ச்சியின் கூடுதல் அமர்வு மாவட்ட நீதிபதி ஜான் மனோ, சார்பு நீதிபதி எம். தர்மபிரபு, உரிமையல் நீதிபதி மதிவதனி வணங்காமுடி, குற்றவியல் நடுவர் எஸ். பாபு உள்ளிட்ட நீதிபதிகள் முன்னிலையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் வழக்கறிஞர்கள் நீதிமன்ற ஊழியர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

“பிரதமரின் உரை எனக்குப் புதிய தெம்பைக் கொடுத்து உள்ளது” – மருத்துவமனையில் இருந்து வானதி சீனிவாசன் நெகிழ்ச்சி

உடல்நலக்குறைவால் கடந்த சில நாட்களாகத் தேர்தல் களத்தில் இருந்து தற்காலிகமாக விலகி சிகிச்சை பெற்று வரும் வானதி சீனிவாசன்,...

விஷு பண்டிகைக்கு கோவையில் இருந்து 5 நாட்களில் 15 டன் காய்கறி,பழங்கள் ஷார்ஜாவுக்கு ஏற்றுமதி

மலையாள புத்தாண்டு விஷு பண்டிகை முன்னிட்டு கோவை விமான நிலையத்திலிருந்து கடந்த 5 நாட்களில் 15 டன் எடை கொண்ட காய்கறிகள் மற்...

கோவை பெரியநாயக்கன்பாளையத்தில்  கொடி அணிவகுப்பு..!

பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் எல்லை பாதுகாப்ப...

அதிமுகவிற்கு ஆதரவு தெரிவித்த கோவை மாவட்ட மலையாள அசோசியேஷன்..!

வரும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, கோவை மாவட்ட மலையாள அசோசியேஷன் நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணியை சந்தித...

சின்னியம்பாளையம் அருகே இளைஞரிடம் செல்போன் மற்றும் ரூ.2,000 பறிப்பு - மூவர் மீது வழக்கு

கோவை சின்னியம்பாளையம் ஆர்.ஜி.புதூர் அருகே மூன்று பேர் கொண்ட கும்பல் இளைஞரை திடீரென வழிமறித்து விலை உயர்ந்த செல்போன் மற்ற...

கோவை நேரு நகரில் 8 பவுன் தங்கச் செயின் பறிப்பு - பீளமேடு போலீசார் தீவிர விசாரணை

கோவை நேரு நகர் மேற்கு பேருந்து நிறுத்தம் அருகே பைக்கில் சென்ற பெண்ணிடமிருந்து மர்ம நபர் 8 பவுன் தங்கச் செயினை பறித்து தப...