சுங்கச்சாவடி கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு: கோவையில் தே.மு.தி.க.வினர் ஆர்ப்பாட்டம்

உயர்த்தப்பட்ட சுங்கச்சாவடி கட்டணத்தை உடனடியாக திரும்ப பெற வலியுறுத்தி கோவையில் தே.மு.தி.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



கோவை: "ரோடு போட மக்கள் வரி ... எதுக்கையா சுங்கவரி", "வஞ்சிக்காதே வஞ்சிக்காதே வாகன ஓட்டிகளை வஞ்சிக்காதே", "திரும்ப பெறு திரும்ப பெறு உயர்த்திய கட்டணத்தை திரும்ப பெறு" என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் முழக்கமிட்டனர்.

பொதுமக்கள் பயன்படுத்தும் அத்தியாவசிய பயன்பாடுகளில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உருளை உள்ளிட்டவற்றின் விலை விண்ணைத் தொட்டிருக்கும் நிலையில், சுங்கச்சாவடி கட்டணமும் ஒன்றிய அரசாங்கத்தால் உயர்த்தப்பட்டு இருக்கிறது.

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உருளை ஆகியவற்றின் விலை ஒரு பக்கம் பொது மக்களின் பொருளாதாரத்தை பதம் பார்க்கும் நிலையில், சுங்க சாவடி கட்டண உயர்வும் இத்துடன் கைகோர்த்து இருக்கின்றது.

இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலை அவரிவிதமாக உயரும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது. இதனை கண்டித்து தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைவர் விஜயகாந்த் சுங்கச்சாவடி முன் ஒன்றிய அரசாங்கத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தப் போவதாக அறிவித்திருந்தார்.



இந்த நிலையிலே தேமுதிக கோவை மாவட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கொச்சின் சாலையில் உள்ள சுங்கச்சாவடி முன் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். "ரோடு போட மக்கள் வரி ... எதுக்கையா சுங்கவரி", "வஞ்சிக்காதே வஞ்சிக்காதே வாகன ஓட்டிகளை வஞ்சிக்காதே", "திரும்ப பெறு திரும்ப பெறு உயர்த்திய கட்டணத்தை திரும்ப பெறு" என ஆர்ப்பாட்டக்காரர்கள் முழங்கினர்.

சுங்கச்சாவடி கட்டண உயர்வால் தரைவழி வர்த்தகத்தை மையப்படுத்திய அனைத்து பொருட்களின் விலையும் அபரிவிதமாக உயரும் என குற்றம் சாட்டினர். அதே சமயம் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உருளை உள்ளிட்டவற்றின் விலை நடுத்தர ஏழை மக்களை கடுமையாக பாதித்து இருக்கின்ற நிலையில், சுங்கச்சாவடி கட்டண உயர்வும் அத்தியாவசிய பொருட்களின் விலையை அதிகரிக்க செய்து ஏழை எளிய மக்களை வாட்டி வதைக்கும் என ஆர்ப்பாட்டக்காரர்கள் காட்டமாக தெரிவித்தனர். எனவே சுங்கச்சாவடி கட்டணத்தை திரும்ப பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், ஏழை எளிய நடுத்தர மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க முறையான பொருளாதார நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.



இந்த ஆர்பாட்டத்தில் கோவை தெற்கு மாவட்ட செயலாளர் Ljj ஜெகன் தலைமையில் கோவை மாநகர் மாவட்ட செயலாளர் சிங்கை k சந்துரு, கோவை வடக்கு மாவட்ட செயலாளர் சண்முகவடிவேலு,மாநில மகளிர் அணி துணை செயலாளர் வனிதாதுரை, மாநில தொழிற்சங்க துணை சட்ட ஆலோசகர் முருகராஜ் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. கோவை ஒருகிணைந்த மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூராட்சி, ஊராட்சி, தொழிற்சங்கம் உளளிட்ட அணைத்து நிர்வாகிகள் வார்டு கிளை கழக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...