பல இடங்களில் அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடங்கள் சேதம்: கோவையில் தமிழ்நாடு அனைத்து சுகாதார செவிலியர் சங்கம் புகார்

கோவையில் நடைபெற்ற தமிழ்நாடு அரசு அனைத்து சுகாதார செவிலியர் சங்க மாநில செயற்குழு கூட்டத்தில் கிராம சுகாதார செவிலியர்களின் பதவி உயர்வு தேக்கத்தை கலைந்திட வேண்டும். ஆண் சுகாதார பணியாளர்களுக்கு வழங்குவது போன்று பதவி உயர்வை பெண் சுகாதார செவிலியர்களுக்கும் வழங்க வேண்டும் என்பன போன்ற ஒன்பது தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


கோவை: தமிழகம் முழுவதும் காலியாக உள்ள சுகாதார செவிலியர் பணி இடங்களை விரைந்து விரைந்து நிரப்ப வேண்டும் என்று செவிலியர்கள் வலியுறுத்தினர்.

தமிழ்நாடு அரசு அனைத்து சுகாதார செவிலியர் சங்க மாநில செயற்குழு கூட்டம் கோவையில் நடைபெற்றது.



இக்கூட்டத்தில் கிராம சுகாதார செவிலியர்களின் பதவி உயர்வு தேக்கத்தை கலைந்திட வேண்டும். ஆண் சுகாதார பணியாளர்களுக்கு வழங்குவது போன்று பதவி உயர்வை பெண் சுகாதார செவிலியர்களுக்கும் வழங்க வேண்டும் என்பன போன்ற ஒன்பது தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முன்னதாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அச்சங்கத்தின் மாநில தலைவர் இந்திரா, தமிழகம் முழுவதும் சுகாதார செவிலியர் பணி இடங்கள் அதிக அளவில் காலியாக இருப்பதாகவும் காலி பணியிடங்கள் காரணமாக பணியில் இருக்கும் செவிலியர்களுக்கு பணிச்சுமை அதிகமாக இருப்பதால் காலிப் பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும் என்று வலியுறுத்தினார்.

மேலும் பல இடங்களில் ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடங்கள் மிகவும் பழுதடைந்து காணப்படுவதாகவும், கால்நடைகளை அடைக்கும் தொழுவங்கள் கூட டைல்ஸ் தரையாக மாற்றப்பட்டுள்ள நிலையில் ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடங்கள் மிகவும் பழுதடைந்துள்ள போதும் அரசு அதனை புணரமைப்பு செய்து தருவதில்லை எனவும் குற்றம் சாட்டினார்.

இது தொடர்பாக நீதிமன்றத்தில் அணுக முடிவெடுத்துள்ளதாகவும் தங்களது பல ஆண்டு கோரிக்கைகளை அரசு நிறைவேற்றாமல் இருப்பதால் போராட்டங்கள் மூலம் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்த இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

Newsletter

மகாவீர் ஜெயந்தி: மார்ச் 31ல் இறைச்சி விற்பனைக்கு தடை - கோயம்புத்தூர் மாநகராட்சி அறிவிப்பு

மகாவீர் ஜெயந்தி விழாவையொட்டி மார்ச் 31, 2026 அன்று கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதியில் அனைத்து விதமான இறைச்சி விற்பனை மற்...

கவுண்டம்பாளையம் தொகுதியில் NTK வேட்பாளர் கலாமணி ஜெகநாதன் வேட்புமனு தாக்கல்

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக கலாமணி ஜெகநாதன் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தா...

பார்க் தொழிற்பக் கல்லூரியில் உலக தண்ணீர் மற்றும் வனங்கள் தினம் கொண்டாடப்பட்டது

கோவை கருமத்தம்பட்டியில் உள்ள பார்க் தொழிற்பக் கல்லூரியில் உலக தண்ணீர் தினம் மற்றும் உலக வனங்கள் தினம் மார்ச் 28 அன்று கொ...

அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. மனைவி கலைச்செல்வி நாம் தமிழர் கட்சியில் இணைவு

வால்பாறை தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. அமுல் கந்தசாமியின் மனைவி கலைச்செல்வி, அதிமுக சார்பில் சட்டப் பேரவை தேர்தலில் போட்டிய...

பிரதமர் மோடி கோவை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கேரளா புறப்பட்டார்

பிரதமர் Narendra Modi கேரளாவில் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள கோவை விமான நிலையம் வந்தடைந்தார். BJP மாநில தலைவர் Nayinar Nag...

கோவையில் குறுத்தோலை ஞாயிறு விழா: கிறிஸ்தவர்கள் பக்திப் பரவசத்துடன் புனிதப் பேரணி

கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள தூய மைக்கல் ஆதித்தூதர் பேராலயத்தில் குறுத்தோலை ஞாயிறு விழா கொண்டாடப்பட்டது. திரளான இறைமக்க...